உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் (09) நடத்த முடியாதென உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படமாட்டாதென இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லையெனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதிலுள்ள சிரமம் குறித்து மாத்திரமே, உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
