இந்திய விசா அலுவலகத்தில் கொள்ளை – ஐவர் கைது!

இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடியமை தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

கிருலப்பனை பகுதியிலுள்ள ஓடையொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 63 வயதான பெண்ணொருவரும் அடங்குகின்றார்.

தும்முல்ல பகுதியிலுள்ள இந்திய விசா அலுவலக்திற்குள் கடந்த 14ஆம் திகதி இரவு புகுந்து அங்கிருந்து மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடிய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles