‘மஞ்சள் தட்டுப்பாடு தற்காலிகமானது – 2021 இல் தீர்வு கிடைத்துவிடும்’

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கொள்கலன்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகர் அரச தகவல்திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மஞ்சள் இறக்கு மதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இறக்குமதி செய்துள்ளனர். அவற்றை மீள ஏற்றுமதி செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்கின்றோம். இதற்காக நுகர்வோரிடம் மன்னிப்பு கோருகின்றோம். ஆனால் 2021 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு உற்பத்தியே போதுமானதாக இருக்கும்.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles