பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மூன்று மாதகாலம் பதவி நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் அடுத்த பொலிஸ்மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டது.
எனவே, தற்போதைய பொலிஸ்மா அதிபருக்கு தற்காலிக பதவி நீடிப்பை வழங்குவதற்கும், அதன்பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் டிரான் அலஸ், ஜனாதிபதி செயலாளர், பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.










