” நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்ககூடிய தகுதியான நபரே பஸில்” – மொட்டு கட்சி

” நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய சிறந்த தலைவர்களில் பஸில் ராஜபக்சவும் ஒருவர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அக்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில் ராஜபக்சவா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சிறந்த தலைவர்கள் உள்ளனர். நீங்கள் பஸில் ராஜபக்சவைப் பற்றி கேட்கின்றீர்கள் எனில், நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்ககூடிய சிறந்த – பொறுத்தமான தலைவர் அவர். போர் காலத்தில் சர்வதேச ஆதரவை பெற்று தந்தவர். போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தவர். இவ்வாறு தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் அவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை போலியானவை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படியான தகுதியான தலைவர்கள் எமது கட்சி வசம் உள்ளனர்.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles