கடவுச்சீட்டு பெற உள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்திற்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தரகர்கள் தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் சில நாட்களாக கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் நெரிசல் காரணமாக நேற்று (17) அலுவலகத்தின் ஒரு நாள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு சேவைகள் முன்கூட்டியே முன்பதிவு முறையில் இடம்பெறுகின்றன.

முந்தைய திகதியில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்து சேவைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தரகர்கள் முறையான முறைக்கு புறம்பாக சட்டவிரோதமான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்க முற்பட்டதால், முன்பதிவு செய்யும் பணியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கடும் நெரிசல் காரணமாக நேற்று ஒரு நாள் சேவையும் இடம்பெறாததால், சேவையை பெற வந்த பலர் பல அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர்.

சிலர் குடிவரவு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக இரவைக் கழிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles