கொள்ளுபிட்டியவில் சொகுசு விபச்சார விடுதி முற்றுகை – கைதான 24 வயது விலைமாதுவிடம் ரூ. 10 கோடி சொத்து!

கொழும்பு, கொள்ளுபிட்டிய பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் விலைமாதுகள் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் தாய்லாந்து யுவதிகளை பயன்படுத்தியே இங்கு விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 24 வயது யுவதியொருவர், சுமார் 10 கோடி ரூபாவரை சொத்து வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மூன்று சொகுசு வாகனங்கள் அவருக்கு உள்ளன என்பதுடன், மூன்று மாடி வீடொன்றும் நிர்மாணிக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே விபச்சார நிலையத்தை நடத்திவந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

விபச்சார நிலையத்தை புதுப்பிப்பதற்காக குறித்த யுவதி, முகாமையாளருக்கு 35 லட்சம் ரூபா கடனாக வழங்கியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபச்சாரம் மூலமே தான் பணம் திரட்டினார் என்பதை அவர் ஒப்புகொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுள் இரு தாய்லாந்து யுவதிகளும் உள்ளடங்குகின்றனர்.
பானதுறை, வலான மத்திய குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் அதிகாரிகளால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பு (இலங்கையில் விபச்சாரம் என்பது சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. தண்டகைக்குரிய குற்றமாகும். அதேபோல விபச்சாரத்தில் ஈடுபடுவது எமது நாட்டு கலை, கலாசார விழுமியங்களுக்கு முரணான செயலாகும். தகவலுக்காகவே இந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது. மாறாக விபச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு அல்ல)

Related Articles

Latest Articles