‘பாதையை புனரமைத்து தாருங்கள்’ – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டம் மற்றும் தொரகொல கிரமாத்திற்கான பிரதான பாதை பல வருடங்களாக திருத்தப்படாமல் காணப்படுகின்றது.

இந்த பாதையின் அவலம் காரணமாக மேற்படி பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்துவருகின்றனர்.

இந்தபாதையை திருத்தி தருமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டபோதும் இதுவரைக்கும் எவ்விதமான தீர்வும் கிடைக்கதாத நிலையில் இப்பிரதேசத்தில் காணப்படும் தொரகல பீகொக் ஹில் போதிருக்காம விகாரையின் விகாராதிபதி ஜனாதிபக்கு பகிரங்கமாக கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றார்.

இந்தகோரிக்கையில் கம்பளையில் இருந்து இரட்டை பாதை நகரத்தின் ஊடாக நீவ்பிகொக் தோட்டம் தொரகல கிராமத்திற்கு வரும் 37 கிலோமீற்ற ரபாதையில் 4.5 கிலோமீற்றர் பாதை பலவருடங்களாக திருத்தபடாமல் பழுதடைந்துகாணப்படுகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துவருகின்றனர்.

தொரகல கிராமத்தில் பெருபாலனோர் விவசாய செயற்பாடுகளில் மரக்கரி உற்பத்திமற்றும் சிறுதேயிலை உற்பத்திகளை15.0000 ஏக்கரில் ஈடுப்படுகின்றனர். இவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இந்த பிரதேசத்தில் தமிழ் சிங்களமக்கள் அடங்களாக 10.000 திற்குமேல் வாழ்ந்துவருகின்றனர். இந்த பாதையை திருத்திதருமாறு பல அரசியல் வாதிகளுக்கு பலமுறைசொன்னாலும் அவை நிறைவேறவில்லை.இன்நிலையில் இந்தபாதையை ஜனாதிபதியாவது திருத்திதறுமாறு கோரிக்கைவிடுகின்றேன்.” – என்றார்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

Related Articles

Latest Articles