‘கொரோனா’ ஆரம்பப்புள்ளியின் மர்மம் நீடிப்பு! விசாரணை தொடர்கிறது!!

ஆவது அலையின் ஆரம்பப்புள்ளி இதுதான் என இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. புலனாய்வு விசாரணைகள் தொடர்கின்றன. விரைவில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா   தெரிவித்தார்.

துருக்கியில் இருந்து இலங்கைக்குவந்த உக்ரைன் விமான ஊழியர்களாலேயே கொரோனா வைரஸ் மீண்டும் பரவியது எனவும், இதுவே 2ஆம் அலையின் ஆரம்பப்புள்ளி எனவும் சிங்கள தேசிய நாளிதழொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பான புலனாய்வு அறிக்கை அரச உளவுப்பிரிவால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் பாதுகாப்பு சபையிடமும் கையளிக்கப்பட்டுள்ளன எனவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதன் உண்மை தன்மை எவ்வாறு என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2 ஆவது அலையின் ஆரம்பப்புள்ளி தொடர்பான புலனாய்வு விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போதுதான் துருக்கியில் இருந்து வந்தவர்கள் தங்கிய ஹோட்டல் தொடர்பான தகவல் கிடைத்தது. இதன் ஊடாகவே வைரஸ் பரவியிருக்கும் என 80 வீதம் நம்புகின்றோம். மினுவாங்கொடவுக்கும், இதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால் அதுவே இறுதி முடிவு அல்ல.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஊடாகவே தொற்று பரவியிருக்கும் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். வான்வழி மற்றும் கடல்வழி என இரண்டிலும் வெளிநாட்டு தொடர்பு இருக்கின்றது. ஆகவே, நாலா புறங்களிலும் புலன் விசாரணைகள் தொடர்கின்றன. விரைவில் ஆரம்பப்புள்ளி தொடர்பான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஆரம்பப்புள்ளி தொடர்பான அறிக்கை இன்னும் கையளிக்கப்படவில்லை. விசாரணைகள் நிறைவடைந்திருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles