“முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியதன் பின்னணியில் உள்ள உண்மை கண்டறியப்பட்டு, அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் மேலும் கூறியவை வருமாறு,
” முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும். இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை , அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால்,சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னணியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும்.” – என்றார்.










