தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய ஆயிரத்து 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று மாத்திரம் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு மக்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.