தேர்தல் ஆட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி!

தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ‘அரசியல் பிரச்சார நடவடிக்கை’ நாளை (15) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை  கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

பங்காளிக்கட்சிகள் மற்றும் மொட்டு கட்சிக்கு ஆதரவான அமைப்புகளும் இதில் பங்கேற்கவுள்ளன.

2024 தேர்தல் வருடம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தலை மையப்படுத்தி – பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் கூட்டமாகவே இது அமையவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது என தெரியவருகின்றது. எனினும், அடுத்த தலைமைத்துவத்துக்கான சமிக்ஞைகள் மேற்படி கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles