மாலபே – காஹன்தொட்ட பகுதியில் நால்வரின் சடலங்கள் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாய் (வயது – 35) , 9 மற்றும் 10 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் மகள் (வயது – 10) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணின் கணவர் கடந்த 28 ஆம் திகதி நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றன.
இந்த நிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
