செங்கடல் பாதுகாப்பு இலங்கை பொருளாதாரத்துக்கும் முக்கியம்…!

” செங்கடல் பாதுகாப்பு விவகாரம் இலங்கைக்கும் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய விடயமாகும். சர்வதேச ரீதியில் எமக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அந்தவகையிலேயே கப்பல் அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக விசேட செலவீனங்கள் செய்யப்படவில்லை.”

இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” இது அமெரிக்க பிரச்சினையோ அல்லது இஸ்ரேல் பிரச்சினையோ அல்ல. செங்கடல் பாதுகாப்பு விவகாரம் இலங்கைக்கும் நேரடியாக தாக்கம் செலுத்தும்.

கப்பல் போக்குவரத்தின்போது செங்கடலை பயன்படுத்தாமல் தென்னாபிரிக்காவுக்கு அப்பால் உள்ள வழியில் சென்றால் இங்கு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அது எமது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும்.

நாம் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரானவர்கள். அதனை ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சர்வதேச ரீதியில் எமக்குள்ள பொறுப்பாகும். கிணற்று தவளைபோல் வாழ முடியாது.

எமக்கு பிரச்சினை ஏற்படும்போது உலகின் உதவி கோரப்படும். அதேபோல சர்வதேச மட்டத்தில் எமக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. அதனைதான் செய்துள்ளோம். இதற்காக மேலதிக செலவுகள் செய்யப்படவில்லை. தற்போதுகூட ஆழ்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுதான் வருகின்றோம். இந்த சமுத்திர பாதுகாப்பு விடயத்திலும் எமது பொறுப்பு நிறைவேற்றப்படுகின்றது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles