இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
78 வயதுடைய ஆணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார். மரண பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
