ஆனையிறவில் கோர விபத்து – ஒருவர் பலி – 8 பேர் படுகாயம்!

கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இபோச பஸ்ஸொன்று, வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன் எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles