“ பெண்களுக்கு பஸ்களில் சுதந்திரமாக பயனிக்க முடியவில்லை, உரசுவதற்கு எவராவது வந்துவிடுகின்றனர், தற்போது புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், பஸ்களில் எவராவது அநாகரீகமாக செயற்பட்டால் கழுத்தை பிடித்து கொண்டுவருமாறு கூறியுள்ளேன்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அத்துடன், வீதிகளில் பெண்களுக்கு சந்திகளில் இருந்து விசில் அடித்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் முடிவு கட்டப்படும் – எனவும் அவர் கூறினார்.
