இலங்கை – இந்திய கப்பல் சேவை 15 ஆம் திகதி ஆரம்பம்!

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டிணம் வரை இந்த படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles