‘O/L பரீட்சைக்கூட சித்தியடையாத 290 பேர் ஊவாவில் முன்பள்ளி ஆசிரியர் பணியில்’

ஊவா மாகாணத்தில் ஆயிரத்து 493 முன்பள்ளிகள் இருந்து வருகின்றன. இம் முன்பள்ளிகளில் கடமையிலுள்ள ஆசிரியைகளில் 290 பேர் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைகளில் சித்தி பெறாதவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக, ஊவா மாகாண சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் டி.எம்.சி. திசாநாயக்க கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஊவா மாகாண முன்பள்ளிகளில் 35 ஆயிரம் சிறார்கள் கல்வி கற்று வருகின்றனர். 2ஆயிரத்து 549 ஆசிரியைகள் கல்வி கற்பிக்கும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மொழி மூலமான முன்பள்ளிகளில் 4ஆயிரத்து 462 சிறார்கள் தமிழ் மொழியில் கல்வி கற்று வருகின்றனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் 160 உள்ளன.

இந்நிலையங்களில் 1983 பேர் டிப்ளோமா தரமுள்ள ஆசிரியைகளாவர். 566 பேர் டிப்ளோமா தரமற்றவர்களாவர். க.பொ.த. சாதாரண தர சித்தி பெறாதவர்கள் 290 ஆசிரியைகளும் இருந்து வருகின்றனர்.
மேலும், பொது இடங்களில் இருந்து வரும் 260 முன்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாதுள்ளன.

ஒருசில முன்பள்ளிகளின் கட்டிடங்கள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றனவென்றும், மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளன.
இதுவிடயம் தொடர்பாக கல்வி அமைச்சிற்கும் அறிவித்துள்ளேன். ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்திற்கமைய முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அத்துடன், அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவானதொரு வேலைத்திட்டமொன்றிற்கமைய பாடநெறியொன்றையும் அறிமுகப்படுத்தவேண்டுமென்று கல்வி அமைச்சிற்கு யோசனையொன்றையும் முன்வைத்துள்ளேன்” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles