சுகாதாரத்துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய நீதி கட்டமைப்பின்கீழ் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“ மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட மேலும் சில தரமான மருந்துகளுக்கு பதிலாக தரம் குறைந்த மருந்துகளை வழங்கியதால் நுவரெலியா மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்டோர் பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர்.வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டில் இந்தச் செயல்கள் குற்றவியல் கொள்ளைகளாகவே பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்தக் கொள்ளைகளுக்கு இடமில்லை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
