ரூ. 37 கோடி பெறுமதியான நீல மாணிக்கக்கற்களுடன் தேரர் உட்பட இருவர் கைது!

கொஸ்லாந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸாரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். புதையல் தோண்டியதன்மூலம் இந்த மாணிக்கக்கற்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles