யாழ் – கண்டி A9 வீதியின் அனுராதபுரம், திறப்பனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
பக்கமூன பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.