Bluetooth இயர்போன்களை பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்ப முதல்ல இதை படிங்க

இன்றைய காலகட்டத்தில், ப்ளூடூத் இயர்போன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவை மூலம் பாடல்களைக் கேட்பது ஃபேஷனாக மாறிவிட்டது.. ஆனால் இந்த வயர்லெஸ் சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஜெர்ரி பிலிப்ஸ் என்ற ஆய்வாளர், இதுகுறித்து நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார்.. இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகி உள்ளன.. தொடர்ந்து வயர்லெஸ் இயர்போன்களில் பாடல்களைக் கேட்பதால் மூளை புற்றுநோய், நரம்பியல் மற்றும் மரபணு கோளாறுகள் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை ஏற்படக்கூடிய சில ஆபத்தான நோய்கள் ஏற்படுவது இந்த ஆய்வில் முடிவில் தெரியவந்துள்ளது..

42 நாடுகளைச் சேர்ந்த 247 விஞ்ஞானிகள் இந்த வயர்லெஸ் சாதனங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளனர்..

சிறிய இயர்போன்கள் மற்றும் இயர் பட்ஸ் மிகவும் ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. இவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு காது மற்றும் மூளை இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் இவை நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும் மூளை திசுக்களை சேதப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்..

இந்த கதிர்வீச்சுகள் காரணமாக மூளை புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.. இயர்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் காதுவலி, தலைவலி, காது கேளாமை மற்றும் காது கேளாமை ஆகியவற்றில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போதெல்லாம், சிறு குழந்தைகள் கூட மொபைல் போன்கள் மற்றும் டிவியில் அதிக நேரம் செலவிடுகின்றனர் அத்தகைய சூழ்நிலையில் அவர்களும் இயர்போன்களைப் பயன்படுத்தப் பழகிவிட்டார்கள். இந்த இயர்போன்களின் கதிர்வீச்சு இளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்னும் ஆபத்தானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..

வயர்லெஸுக்கு பதிலாக வயர்கள் உள்ள இயர்போன்களைப் பயன்படுத்த முயற்சிக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.. பாடல்களைக் கேட்க அல்லது நீண்ட நேரம் வீடியோக்களைப் பார்க்க ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தவும், நீங்கள் உங்கள் வயர்லெஸ் சாதனங்களைப் பயன்படுத்தாதபோது, ​​அவற்றை உங்கள் கழுத்து அல்லது காதில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்..

ஒரு நாளைக்கு 60 நிமிடங்களுக்கு மேல் இயர்போன்களைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எல்லோரும் பாடல்களைக் கேட்க விரும்புகிறார்கள், ஆனால் இதில் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles