டீசலுக்கு பதில் மண்ணெண்ணெயில் ஓடிய பஸ்கள்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் நுவரெலியா பொலிஸார்

நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே நானுஓயா, மார்காஸ்தோட்ட, பொரலாந்த போன்ற பகுதிகளுக்குச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் சோதனையிடப்பட்டன. இதில் மூன்று பேருந்துகள் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இவ்வாறு பேருந்துகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வக முடிவுகளின் அடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா தலைமையகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சமீபகாலமாக டீசலின் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக, டீசலுக்கு மாற்றாகவும், டீசலுடன் கலந்தும் பேருந்துகள் மற்றும் டிப்பர்களில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இவ்வாறு இயக்கப்படும் வாகனங்கள் அதிக அளவிலான நச்சுப் புகையையும், அடர்ந்த கரும்புகையையும் வெளியிடுகின்றன. இதனால் காற்று மாசுபடுவதோடு மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. மேலும், வாகன இயந்திரத்திற்கு (Engine) விரைவில் பெரும் சேதம் ஏற்பட்டு பழுதடைகிறது.

குறிப்பாக, எரிபொருள் உட்செலுத்திகள் (Injectors) பழுதடைதல், பிஸ்டன் (Piston) தேய்மானம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. வாகன உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருளைத் தவிர்த்து, வேறு எரிபொருட்களைப் பயன்படுத்துவதோ அல்லது அவற்றைக் கலந்து வாகனங்களை இயக்குவதோ முற்றிலும் சட்டவிரோதமானது” என்று பொறுப்பதிகாரி வலியுறுத்தினார்.

அத்துடன், இவ்வாறான மாற்றமைக்கப்பட்ட பேருந்துகள் விபத்துக்குள்ளாகும்போது உடனடியாகத் தீப்பற்றும் அபாயம் இருப்பதுடன், சாதாரண நேரங்களிலும்கூட திடீரெனத் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளைக் கண்டறியும் நோக்கில் நுவரெலியாவில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வி.தீபன்ராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles