நவீன் முன்னெடுத்த அபிவிருத்திகள் எவை? இரண்யா ஹேரத் கேள்வி

” அமைச்சுப் பதவியை வகித்து நுவரெலியா மாவட்டத்துக்கு நவீன் திஸாநாயக்க செய்த சேவைகள் என்ன? இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கினாரா? இல்லை. கொழும்பில் இருந்து சுகபோகம் அனுபவிக்கின்றார். எனவே, நுவரெலியா மாவட்டத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ள அவரை மக்கள் நிராகரிக்கவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இரண்யா ஹேரத் தெரிவித்தார்.

நுவரெலியா, லபுகலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை, ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும். அதேபோல் நுவரெலியா மாவட்ட மக்கள் எனக்கான ஆதரவை வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles