இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
குறித்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, பயணத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.
முன்னாள் இராணுவ அதிகாரியான கேணல் முகமட் அன்சார் மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.










