செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44 ஆவது நாளான இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது.
இதன்போது 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதற்கமைய செம்மணி புதைகுழியில் இதுவரை மொத்தமாக 491 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 489 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
