ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.
தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர்.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.










