நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசு கைவிட வேண்டும்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தனிநபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசமைப்புத் திருத்தம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இது குறித்து எம்மிடம் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. நாம் கலந்துரையாடலுக்கு நேரம் கோரியபோதும், உரிய காலப்பகுதிக்குள் அது வழங்கப்படவில்லை.

இந்த முன்மொழிவு பொருத்தமானது அல்ல என்பதை மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையும் இதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஏனைய மதத் தலைவர்களும் இது குறித்த தமது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறோம்.

எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்; இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு வரும். பிரான்ஸிலுள்ள முக்கிய சட்டத்தரணிகள் சங்கம் ஒன்றும் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.” – என்றார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles