IMF ஐ நாட முன் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டம்!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு, 18 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்படவுள்ளனர்.

எனவே, இலங்கையில் நிலையானதொரு அரசுள்ளது என்பதை காண்பிப்பதற்காகவே 18 ஆம் திகதி முழு அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதென அந்த வட்டாரங்கள் கூறின.

அதேவேளை, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளதென புதிதாக இராஜாங்க அமைச்சு பதவியை பெற்ற சாந்த பண்டார அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles