இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் அமைந்துள்ள ‘இந்திய இல்லத்தில்’ நேற்று (12) மாலை இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சமகால அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடினர்.
