2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ.26.75 கோடி மற்றும் ரூ.27 கோடிக்கு சென்று அசத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 – 25) என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய 3 இந்திய ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுபோலவே தற்போது ஏலத்திற்கு சென்றுள்ளார்கள் அவர்கள். அதனை காணலாம்…
இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் 10.30 PM வரை நடக்கிறது.