ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு ஈரானுக்கு அழைப்பு!

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது.

எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.

சீனாவிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளதால் இது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

உலகளாவிய ரீதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த ஆலோசனைகளுக்காகவே விசேட பாதுகாப்பு சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles