ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
அவர் தற்போது ரஷ்யாவை சென்றடைந்து, அங்கு சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.
தெஹ்ரான் மற்றும் மாஸ்கோ இடையே நிலவும் நெருக்கமான உறவை வலுப்படுத்தவும், முக்கிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தச் சந்திப்பு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என ஈரான் நம்புகின்றது.
அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் முயற்சிகளும் வெற்றியளிப்பதாக இல்லை.










