1400 பேர் மட்டுமே வாழும் தனித்தீவு: கடும் வறட்சியால் பரிதவிப்பு

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை.

குடிநீருக்காக முழுமையாக பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கும் இத்தீவு, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது மிக மோசமான வறண்ட காலநிலையை எதிர்கொண்டுள்ளது.

இத்தீவில் 1990களின் பாதியில் கட்டப்பட்ட ஒரேயொரு மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி (நீர் தேக்கம்) மட்டுமே குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது.

தற்போது இந்த ஏரியின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவில் ஆறில் ஒரு பங்காக (1,50,000 கன மீட்டர்) குறைந்துள்ளது. கோடைகாலத்தில் இங்கு தினசரி நுகர்வு 900 கன மீட்டராக உள்ளதால், இந்த நீர் இன்னும் ஐந்துரை மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

இதன் காரணமாக, ஏரியின் நீர் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விவசாயிகளுக்கான நீர் விநியோகத்தை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

இதனால் லிவாடி (Livadi) கடலோரக் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் காய்ந்து போயுள்ளதுடன், கிணற்று உவர்நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அஸ்திபாலா தீவின் நிரந்தர மக்கள் தொகை 1,400 மட்டுமே. ஆனால், கோடைகாலத்தின் உச்சத்தில் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் மக்கள் தொகை 7,000 ஆக உயர்கிறது.

இந்த திடீர் மக்கள் தொகை பெருக்கத்தினால் நிலவும் கடுமையான நீர் தேவையை அங்குள்ள தற்போதைய கடல்நீர் சுத்திகரிப்பு (Desalination) நிலையங்களால் ஈடுசெய்ய முடியாமல் போயுள்ளது.

இதனை எதிர்கொள்ள தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தற்காலிக கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை அதிக செலவு மிக்கவை மற்றும் அதிக ஆற்றல் நுகரக்கூடியவை என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இத்தீவில் உள்ள சில ஹோட்டல் உரிமையாளர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

காலிபோர்னியா அல்கலாய் (Carolina Alkalai) என்ற ஹோட்டல் உரிமையாளர், தங்களது அறைகளைத் தினசரி சுத்தம் செய்வதைத் தவிர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 யூரோ மதிப்புள்ள வவுச்சர்களை (Vouchers) வழங்குகிறார்.

மேலும், எதிர்காலத்தில் நீச்சல் குளங்களுக்குப் பதிலாக மழைநீரைச் சேமிக்கும் தொட்டிகளுடன் கூடிய ஹோட்டல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக, வரும் 2049 ஆம் ஆண்டளவில் இந்தத் தீவுகளில் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை இன்னும் மோசமடையக்கூடும் என ஏதென்ஸை தளமாகக் கொண்ட “டெமோக்ரிட்டோஸ்” (Demokritos) தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles