ஈரான் மீது கடந்தபெப்ரவரி மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளில் 15,000-க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல்களை விட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள புதிய இலக்குகளைத் தாக்குவதற்கு இஸ்ரேலிய இராணுவம் முறையான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இரு நாட்டு இராணுவத் தலைவர்களும் இணைந்து நடத்திய ஆலோசனையில் இந்தத் தீவிரத் தாக்குதல் குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இந்தத் தகவல்கள் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான போர்ச் சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
அதேவேளை, இஸ்ரேல்மீது ஈரானும் தீவிர தாக்குதல்களை நடத்திவருகின்றது.










