டித்வா புயலால் சேதமடைந்த கண்டி முதல் கொட்டகலை வரையிலான புகையிரதப் பாதை சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பாதை சீரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் கடுமையாக சேதமடைந்த புகையிரதப் பாதை சீரமைக்கப்பட்டு புகையிரத இயக்கத்திற்காக தயார் செய்யப்பட்டு வருவதாகவும், கடந்த பல நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை சீரமைப்பு பணிகளுக்குத் தடையாக இருந்ததாகவும் இத்தகைய சூழ்நிலையிலும், மண்சரிவால் சேதமடைந்த கொட்டகலை புகையிரதப் பாதையின் சீரமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த மாதத்திற்குள் இங்கு சீரமைப்பு பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது, மலையக புகையிரத பாதையில் நானுஓயாவிலிருந்து பதுளை வரையில் குறைந்த அளவிலான புகையிரத சேவைகள் நடைபெற்று வருகின்றன.
கண்டி புகையிரத வீதியின் கொட்டகலை மற்றும் கிறேட்வெஸ்டன் பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு பெரிய மண்சரிவினால் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தால், நாவலப்பிட்டியவிலிருந்து பதுளை வரையில் மலையக புகையிரத பாதையில் புகையிரதங்களை இயக்க முடியும் என புகையிரத ஊழியர்கள் கூறுகின்றனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்










