மலையக தமிழர்களுக்காக ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ – புதிய அரசமைப்பில் யோசனை முன்வைக்க திட்டம்

“மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால், பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ என்ற புதிய பிரேரணையை புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராக உள்ளது”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவல் வெளியிட்ட மனோ கணேசன்,

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் எடுத்துக் கூறினோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இன்றைய அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறைமையை ஒழித்து விடுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுமா என்ற இந்திய அரசின் நியாயமான சந்தேகத்தை நாங்கள் தீர்த்து வைத்தோம்.

நல்லாட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தை ஆரம்பித்த பொழுது, அது நிறைவேறாவிட்டாலும் கூட ஒரு இடைக்கால அறிக்கை வரை நாங்கள் வந்திருந்தோம்.

தாம் ஜனாதிபதியானால் அந்த இடைக்கால அறிக்கையில் எட்டப்பட்ட நிலைப்பாடுகளில் இருந்து, புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் போவதாகவும், எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடங்கப் போவதில்லை என்றும், அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கை, இன்றைய அரசியலமைப்பில் இருக்கக் கூடிய 13 ஆம் திருத்தத்தை, மாகாண சபை முறைமையை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கிறது.

ஆகவே, இந்திய அரசுக்கு அத்தகையதொரு சந்தேகம் நியாயமாக இருந்தாலும் கூட, அது தற்போது அவசியமில்லை.
அனுரகுமார திசாநாயக்க தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் கூறியிருந்தோம்.

அத்துடன், 12, 13 மாவட்டங்களில் சிதறிப் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால்,

பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ என்ற புதிய பிரேரணையை புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தோம்.

அனுரகுமார திசாநாயக்க தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும், இந்தியாவுடனான உறவு சார்பாகவும் ஒரு நேர்முகமான சிந்தனை கொண்டிருந்தாலும் கூட, அவரது அரசாங்கத்திலும் அவரது கட்சியிலும் இருக்கக் கூடிய பலர் எதிர்மறை எண்ணப்பாடுகள் கொண்டிருப்பதாக நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles