LPL கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பம்!

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை ஆரம்பமாகின்றது.

நவம்பர் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்பத்தில் இப்போட்டித் தொடர் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானம், கண்டி பல்லேகல விளையாட்டு மைதானம் மற்றும் தம்புள்ள ரங்கிரி விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ரங்கிரி தம்புள்ள மைதானம் நீக்கப்பட்டு ஏனைய இரண்டு மைதானங்களில் போட்டி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதியாக இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் மாத்திரம் போட்டிகள் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பட்டது.

அந்த வகையில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு நாளை 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் 5 அணிகளின் பங்கெடுப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதில், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங்ஸ், காலி க்ளேடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles