லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பமாகின்றது.
முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.
நாளை மறுதினம் 14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் தம்புள்ள வைகீங், ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.