நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: சுரேஸ் சலே கைது ஏமாற்று நடவடிக்கை!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் அரசியல் நோக்கமே உள்ளது.”

இவ்வாறு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

“பேராயர்,கத்தோலிக்க சபை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் அரசாங்கத்தை சபிக்கின்றனர். நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளது. இவற்றை திசை திருப்புவதற்காக இக்கைது இடம்பெற்றிருக்கலாம்.” எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

சனல் 4 ஊடகமென்பது இராணுவத்துக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கும் ஊடகமாகும். அதில் அசாத் மௌலானா தெரிவித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஏற்புடையது அல்ல.

சுரேஷ் சலே என்பவர் 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர்வரை மலேசியாவில் இருந்தார். அதன்பின்னர் இந்தியாவில் இருந்தார். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அவர் இலங்கையில் இருக்கவில்லை.

நௌபர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரியாவார். வெளிநாட்டு விசாரணைகள்கூட இதனையே வெளிப்படுத்தின. நிலைமை இவ்வாறு இருக்கையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்குரிய காரணம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles