தேசிய மக்கள் சக்தியினால் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது காயமடைந்த சுமார் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதப்படுத்துவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தனர்.
எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் பொலிஸ் எல்லையை மீறி முன்னேற முயற்சித்ததால், குழுவை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பல வீதிகள் தடைப்பட்டுள்ளன.
இதன்படி, நகரசபையை அண்மித்துள்ள வீதிகள் மற்றும் அதனை அண்மித்துள்ள பல வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேர் கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களிலும் வைத்தியசாலை சதுக்கத்திலும் எதிர்ப்பு பேரணிகளை நடத்துவதற்கு முன்னதாக இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
