நுவரெலியா மாவட்டத்தில் பரப்புரைச்சமர் உக்கிரம்!

நுவரெலியாவில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், அடுத்தவாரம் முதல் சூறாவளிப்பிரச்சாரம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

பிரதான கட்சிகள் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தாலும் அடுத்தவாரம் முதலே சூறாவளிப்பிரச்சாரம் ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Latest Articles