O/L பரீட்சையை மார்ச்சில் நடத்தலாம் என கல்வி அமைச்சர் நம்பிக்கை!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் சாதாரணதரப்பரீட்சையை நடத்தவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த பரீட்சை மார்ச்சில் நடைபெறும் என்ற அறிவிப்பு கல்வி அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles