Home Blog Page 103

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கவலை!

உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது.

ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது.

உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடு​கள் உறுப்பின​ராக உள்​ளன.

இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது.

சுகா​தா​ரம் தொடர்பான தகவல்​கள், அவற்றை பகிர்ந்து கொள்​ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்​பான எச்​சரிக்கை வெளி​யிடு​தல் போன்ற நடவடிக்​கைகளை உலக சுகா​தார அமைப்​புடன் நிறுத்​திக் கொண்​ட​தாக அமெரிக்க அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

இதன் மூலம் இந்த அமைப்​புடன் அமெரிக்கா​வுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்​துள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த 2024, 2025-ம் ஆண்​டு​களுக்​கான தொகை 130 மில்​லியன் டாலரை அமெரிக்க வழங்க வேண்டியுள்​ளது என்று உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் இந்த முடிவால் உலகள​வில் ஏற்​படும் நோய் பரவல், விஞ்​ஞானிகளின் பங்​களிப்​பு, மருந்து நிறுவனங்​கள் தடுப்​பூசி தயாரிப்​பது போன்ற பணி​கள் கடுமை​யாக பாதிக்​கும் என்று ஜார்ஜ் டவுண் பல்​கலைக்​கழக பொது சுகா​தார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்​டின் கவலை தெரி​வித்​துள்​ளார்.

என்​னுடைய வாழ்நாளி​லேயே மிக பேரழி​வான முடிவை அமெரிக்க ட்ரம்ப் எடுத்​துள்​ளார் என்று லாரன்ஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இத்​தனைக்​கும் உலக சுகா​தார அமைப்பை தொடங்​கும் முயற்​சியை முன்​னெடுத்​தது அமெரிக்​கா​தான். அதே​போல், இந்த அமைப்​புக்கு அதிக நிதி​யுதவி வழங்​கு​வதும் அமெரிக்​கா​தான். ஆண்​டுக்கு சராசரி​யாக 111 மில்​லியன் டாலரை இந்த அமைப்​புக்கு அமெரிக்கா வழங்​கு​கிறது.

அத்​துடன், மருத்​து​வர்​கள், விஞ்​ஞானிகள், சுகா​தா​ரத் துறை பணி​யாளர்​களை​யும் உலக சுகாதார அமைப்​பின் பணி​களுக்கு அமெரிக்கா ஈடு​படுத்​தி​யது. ஆனால், தற்​போது அமெரிக்கா வில​கியது, சர்​வ​தேச அளவில் புதி​தாக நோய் பரவல் ஏற்​பட்​டால் பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தும் என்று கூறுகின்​றனர்.

இதற்​கிடை​யில், கோவிட்​-19 கரோனா தொற்​றின் போது, அமெரிக்கா​வுக்கு முன்​கூட்​டியே சரி​யான தகவல்​களை அளிக்கவில்​லை, சீனா​வுக்கு ஆதர​வாக செயல்​படு​கிறது, தவறான தகவல்​களை வெளி​யிடு​கிறது போன்ற குற்​றச்​சாட்​டு​களை அமெரிக்கா கூறியது குறிப்​பிடத்​தக்​கது.

அமெரிக்​கா​வின் வில​கலால் உலகள​வில் போலியோ ஒழிப்​பு, குழந்​தைகள் உடல்​நலம், புதிய வைரஸ் பரவி​னால் உடனடி​யாக ஆராய்ச்சி மேற்​கொண்டு தடுப்​பூசி தயாரித்​தல் போன்ற பணி​கள் பாதிக்​கப்​படும் என்று நிபுணர்​கள் அஞ்​சுகின்​றனர்.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ​ தனது முடிவை மறு​பரிசீலனை செய்​ய வேண்​டும்​ என்​று வலி​யுறு​த்​தி வருகின்​றனர்​.

ஜனவரி மாத வருமான இலக்கை 22 நாட்களில் தாண்டியது சுங்கம்

2026 ஜனவரி மாத வருமான இலக்கை, இலங்கை சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்திற்கான வருமான இலக்காக, 160.2 பில்லியன் ரூபாவை, இலங்கை சுங்கம் நிர்ணயித்திருந்தது.

இருப்பினும், மாதத்தின் 22 ஆம் நாளுக்குள் 175.4 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டியுள்ளது. இது, சுமார் 9.5% அதிகமாகும்.

டிசம்பரில் பல நாட்கள் வழக்கமான துறைமுக மற்றும் சுங்க நடவடிக்கைகளை பாதித்த சூறாவளியால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் கொள்கலன் வெளியேற்றம் விரைவுபடுத்தப்பட்டது, இந்த வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அதிக இறக்குமதி அளவுகளும் கூடுதல் வருமானத்தில் பங்களித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில், 2,551 பில்லியன் ரூபாவை வசூலித்து, சிறிலங்கா சுங்கம் அதன் வரலாற்றில் அதிகபட்ச ஆண்டு வருமானத்தை பதிவு செய்தது.

இது திருத்தப்பட்ட ஆண்டு இலக்கான 2,241 பில்லியன் ரூபாவைத் தாண்டியது.

2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 1,553 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடும்போது 64.2% அதிகரிப்பாக இருந்தது.

2026 ஆம் ஆண்டில், சுங்கம், 2.2 டிரில்லியன் ரூபாவை ஆண்டு வருமான இலக்காக நிர்ணயித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 13.5% குறைவாகும்.

வாகன இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் குறைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் பங்கேற்ற சஜித்!

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் பங்கேற்ற சஜித்!

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Matthew Duckworth மற்றும் அவரது பாரியார் Tanya Duckworth ஆகியோரின் கௌரவ அழைப்பை ஏற்றே அவர் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் இங்கு கூடியிருந்தனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு? மக்கள் கூறினால் வீடு செல்லவும் தயார்!

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

“ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் நான் காத்திருக்கின்றேன்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே சுவிஸில் இருந்து அவசரமாக நாடு திரும்பினேன்.” எனவும் குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவேண்டியதில்லை.
பிரதமர் பதவி விலகவேண்டும் என மக்கள் தீர்மானித்தால் வீட்டுக்கு செல்வதற்கு நாம் தயார். நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்பு கூறுவோம்.” – என பிரதமர் மேலும் கூறினார்.

 

 

 

மரக்கறி விலைப்பட்டியல் (24.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (24.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நேட்டோ குறித்து சர்ச்சை கருத்து: ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் பிரிட்டன் பிரதமர்!

நேட்டோ நாடுகள் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷ்யா கைப்பற்றிவிடும் எனவும் அவர் கூறி வருகிறார்.

மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார்.

டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக மன்ற மாநாட்டில் உரையாற்றி டிரம்ப், நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை என்று கூறினார்.

நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் எமக்கு தேவையுமில்லை. ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பினோம் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அனுப்பினார்கள்…

ஆனால், அவர்களின் படைகள் போர் களத்தில் முன்களத்தில் இல்லை. அமெரிக்க படையினரே முன்களத்தில் இருந்தனர்’ என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி தங்கள் நாட்டையும் அவமதிப்பதாக உள்ளதாகவும், இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரிட்டனர் பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை கடந்த 2001ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் நேட்டோ அமைப்பில் இருந்த பல்வேறு நாடுகள் பங்கேற்றன.

இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். இந்த போரில் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 457 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரை வெல்லுமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் RPS இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (22) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகின்றது.

இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் குவிந்தது.

இதையடுத்து, 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.

3வது விக்கெட்டுக்கு 122 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.

இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்!

அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் சில தினங்களுக்கு முன்னர் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று நடைபெற்ற அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டது என்று தெரிகின்றது.

அதன்படி ஒஸ்ரின் பெர்னாண்டோ, ரஞ்சித் ஆரியரட்ன, பேராசிரியர் வசந்தா செனவிரட்ன ஆகியோர் சிவில் சமூகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்களாக அரசமைப்புப் பேரவைக்கு நியமனம் பெற்றுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? சுவிஸிலிருந்து நாடு திரும்பியகையோடு பிரதமர் கேள்வி!

“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? ஆதனை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து அவசரமாக வந்தேன், அந்த பிரேரணை எங்கே எனவும் அவர் சிரித்தப்படியே வினா தொடுத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர்.

சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்தார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...