Home Blog

தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் அழிக்கப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.

சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

சீரற்ற காலநிலையில் 9,745 பேர் பாதிப்பு

கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 6 வீடுகள் முழுமையாகவும், 2,576 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்”

“எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்”

“ இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது ஆட்சிகாலத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”- என்று கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் தனது உரையில் மேலும் கூறியவை வருமாறு,

 

“ வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அண்மையில் யாழ். சென்றபோது அங்கு என்ன செய்ய வேண்டும் என ஜயசூரிய கேட்டார். சர்வதேச விமான நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறினார். இப்படி வடக்கு குறித்து பல வழிகளிலும் சிந்திக்கப்படுகின்றது. எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும். இங்குள்ள துறைகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றேன். புலம்பெயர் தமிழர்கள் இது தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களுக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

தமிழ் மக்களின் இருப்பு பற்றி கவலை வெளியிடுகின்றனர். இங்குள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. எனவே, இலங்கை நம்பிக்கையான நாடுதான் என்ற நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.” – என்றார்.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா

 

ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

மே 10-ம் திகதி தொடங்கிய இதன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வெற்றிபெற்றார்.

அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடத்தை அணிவித்தார்.

எத்தியோப்பியாவை சேர்ந்த போட்டியாளரான ஹாசெட் டெரெஜே அட்மாசு முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். போலந்து நாட்டின் மஜா கிளாஜ்தா இரண்டாவது ரன்னர் ஆகவும் மார்டினிக்கின் ஆரேலி ஜோகிம் மூன்றாவது ரன்னர் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு அவரது மனிதநேய பணிகளை கவுரவிக்கும் விதமாக மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் புக்கட் தீவைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர். மேலும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் மூன்றாவது ரன்னர் ஆக தேர்வானார். தற்போது அவர் தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சு பதவி வழங்கப்பட்டால் ஒரு வருடத்துக்குள் பாதாள குழுக்களுக்கு முடிவு!

தனக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படுமானால் ஒரு வருட காலப்பகுதிக்குள் பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ பீல்ட்மார்ஷல் பதவியென்பது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்கு நிகரானதாகும். எனவே, அமைச்சுகளின் செயலாளர் பதவி எனக்கு பொருந்தாது. வழங்குவதாக இருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சே வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் ஒரு வருடகாலப்பகுதிக்குள் பாதாள குழுக்களை கட்டுப்படுத்தலாம். இதன் அர்த்தம் அவர்களை கொல் செய்வது என்பது அல்ல. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பாதாள குழுக்களுடன் தொடர்புபட்டதே போதைப்பொருள் விவகாரம். எனவே, அதற்கும் ஒன்றரை வருடகாலப்பகுதிக்குள் முடிவு கட்டலாம்.
நாட்டுக்காக பொறுப்பொன்றை வகிக்க வேண்டிய கட்டாய தேவை எழும்பட்சத்தில் அதனை ஏற்பதற்கு நான் பின்நிற்கமாட்டேன். “ -என்றார்.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 31.05.2025 அன்று முதல் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று 31.05.2025 அன்று மாலை முதல் திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மரக்கறி விலைப்பட்டியல் (01.06.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு

ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள நாட்டின் 2-வது பெரிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் சனிக்கிழமை (மே 31) பிற்பகலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

 

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் படகு சவாரி நிறுத்தம்!

நுவரெலியாவில் அடை மழை பெய்துவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவுவதால் நுவரெலியா, கிரகரி வாவியில் படகு சவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை படகுசவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் படகு சவாரி பாதிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என படகு சேவையை வழங்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

வி.தீபன்ராஜ்

5 மடங்காகிறது இந்தியாவின் இராணுவ பட்ஜட்!

 

இந்தியாவின் இராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய ராணுவத்துக்கு அதிகளவு நிதி ஒடுக்கீடு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் 1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில 8.8 லட்சம் கோடியாக உயரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 30 ஆயிரம் கோடியாக உள்ளது. இது ரூ.2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இந்தியா இருக்கும் எனவும்.

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடியாக உயரும். ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும்.

அத்துடன், பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும்.

முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியை சார்ந்து இருக்கும். சிக்கலான ராணுவ தளவாடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நபர்களுக்கு பற்றாக்குறை உள்ளது எனவும் மேற்படி கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

நடிகர் ராஜேஷ் காலமானார்

0
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம்...

யார் இந்த வேடன்? 

0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல்...

நடிகையாக அறிமுகமாகிறார் வனிதாவின் மகள் ஜோவிகா!

0
  நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி...

செய்தி

தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் அழிக்கப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள்

0
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும்...

சீரற்ற காலநிலையில் 9,745 பேர் பாதிப்பு

0
கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட...

“எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்”

0
"எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்" “ இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது...