Home Blog

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் மிரட்டியுள்ளார்.

முன்னதாக அளிக்கப்பட்ட பத்து நாட்கள் அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், இந்த இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும், வடக்கு, கிழக்கை மையப்படுத்தி இயங்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இது தொடர்பில் அக்கட்சிகள் தீர்மானம் எடுக்கவுள்ளன.

அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், அதன் தெரிவுகளை இன்னும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் அரசு வசம் உள்ளது.

எனினும், நிலக்கரி மோசடி உள்ளிட்ட விடயங்களை அம்பலப்படுத்தும் நோக்கிலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சிலவேளை, விவாதத்துக்கு முன்னர் எரிசக்தி அமைச்சர் பதவி விலகுவதற்குரிய சாத்தியமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் மூன்று நாள் கொண்ட கடின பந்து கிரிக்கெட் போட்டியாக, நடைபெற்றது.

போட்டியின் இரண்டாவது நாள் காலை 9.50 மணியளவில் ஆரம்பமானது. முதல் நாள் முடிவில் காமினி தேசிய பாடசாலை அணி விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்களுடன் இருந்தது. இரண்டாவது நாளில் அவர்கள் ஆட்டத்தை தொடர்ந்தபோதும், மழை குறுக்கீட்டினால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் முடிவில் காமினி தேசிய பாடசாலை அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் சடேவ் 51, தஹம் செனவிரத்ன 42 மற்றும் அணித்தலைவர் சய கீதாஞ்சன 42 ஓட்டங்கள் எடுத்தனர்.

பந்துவீச்சில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியின் சார்பாக அணித்தலைவர் செபஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், டிலுஷன், யதுசன் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மூன்றாவது நாள் காலை 9.30 மணிக்கு போட்டி மீண்டும் ஆரம்பமானது. காமினி தேசிய பாடசாலை அணி தமது முதல் இன்னிங்சை இடைநிறுத்தி, பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணிக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்க வாய்ப்பு வழங்கியது.

இதன்போது பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்கள் பெற்றது. ரிஷாந்தன் 54 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஸ்கோர் செய்தார்.

பந்துவீச்சில் காமினி தேசிய பாடசாலை அணியின் சார்பாக தனுஜன் மற்றும் நிமேஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, காமினி தேசிய பாடசாலை அணிக்கு 73 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பாடிய அவர்கள் எந்தவித விக்கெட் இழப்பும் இன்றி இலக்கை எளிதில் அடைந்தனர்.

இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான “Battle of Little England” கிண்ணத்தை காமினி தேசிய பாடசாலை அணி கைப்பற்றியது.

விருதுகள்:

சிறந்த துடுப்பாட்ட வீரர் – ரிதுர்சான் (பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி)
சிறந்த பந்துவீச்சாளர் – தனுஜன் (காமினி தேசிய பாடசாலை)
சிறந்த களத்தடுப்பாளர் – சதுர்ஸ்வரன் (பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி)
வளர்ந்து வரும் வீரர் – அஸ்வின் (பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி)

— கஜரூபன் திவ்யா, நுவரெலியா

உயர்தரத்தில் 3 A எடுத்துச் சாதனை படைத்த யாழ். இந்து மாணவன் அக்சயன் திடீர் மரணம்!

 

உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர் ஒருவர், திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இணுவில் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான லவன் அக்சயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். மாவட்ட மட்டத்தில் 24 ஆவது இடத்தைப் பெற்று அவர் சாதனை படைத்திருந்தார்.

பல்கலைக்கழகப் பிரவேசத்துக்காகக் காத்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

இன்று வெற்றிபெறும் அணி எது?

ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 142 ரன்​கள் இலக்கை துரத்​திய டெல்லி அணி ஒரு கட்​டத்​தில் 4.3 ஓவர்களில் 26 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்து பரிதவித்​தது.

எனினும் 22 வயதான சமீர் ரிஸ்வி 47 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும், அனுபவம் வாய்ந்த டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 32 பந்​துகளில், 39 ரன்​களும் சேர்த்து 17 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தனர்.

இதில் சமீர் ரிஸ்வி சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தார். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

முதல் ஆட்​டத்​தில் சிறப்​பாக செயல்​படத்​தவறிய கே.எல்​.​ராகுல், பதும் நிசங்​கா, நித்​திஷ் ராணா, அக்​சர் படேல் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவிப்​ப​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பின்​வரிசை​யில் விப்ராஜ் நிகாம், டேவிட் மில்​லர் ஆகியோர் தாக்​குதல் ஆட்டத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்ள நடராஜன் லக்னோ அணிக்கு எதி​ராக 3 விக்​கெட்​களை வீழ்த்தி அசத்​தி​யிருந்​தார். இதே​போன்று லுங்​கி நிகிடி, குல்​தீப் யாதவ் ஆகியோ​ரும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி இருந்​தனர். முகேஷ் குமார், அக்​சர் படேல் ஆகியோர் ரன் குவிப்பை வெகு​வாக கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர்.

இவர்​கள் மும்பை அணிக்கு எதி​ராக​வும் சிறப்​பாக செயல்பட முயற்​சிக்​கக்​கூடும். ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை அணி தனது முதல் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 221 ரன்​கள் இலக்கை துரத்​திய மும்பை அணி ரோஹித் சர்மா விளாசிய 78 ரன்​கள் மற்​றும் ரியான் ரிக்​கெல்​டன் சேர்த்த 81 ரன்​கள் உதவி​யுடன் எளி​தாக வெற்​றியை வசப்படுத்தியது.

இவர்​களு​டன் பேட்​டிங்​கில் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்மா, ஹர்​திக் பாண்​டி​யா, நமன் திர், ஷெர்ஃபேன் ரூதர்​போர்டு ஆகியோ​ரும் தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் திறன் கொண்​ட​வர்​கள். பந்​து​வீச்​சில் டிரெண்ட் போல்ட், ஜஸ்​பிரீத் பும்ரா, ஷர்​துதல் தாக்​குர் ஆகியோர் டெல்லி அணி​யின் பேட்​டிங்​ வரிசைக்​கு அழுத்​தம்​ ​கொடுக்கக்கூடும்​.

 

இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

 

இதுவரை 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

நவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்க ஈரானிய படையினர் புதுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர் எனவும் ஈரான் விமானப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய போர் உத்திகள் எதிரி நாடுகளுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா எல்ஹாமி  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய வான் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு நவீன அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தேவையான தொழில்நுட்ப வலிமை அந்நாட்டிடம் இருக்கின்றது என சில போர் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்: ஈரானில் கொண்டாட்டம்!

அமெரிக்காவுக்கு சொந்தமான இரு ராணுவ விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் மேற்படி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.

இது மகத்தான வெற்றி எனக் கருதி ஈரான் மக்கள் தெருக்களில் கொண்டாடிவருகின்றனர்.

இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவு என ஈரான் மக்கள் கருதுகின்றனர்.

தங்களின் ராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு இது ஒரு தகுந்த பதிலடி என்று ஈரான் அரசு பெருமிதம் கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் ஈரானிய ராணுவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது எனவும போரைத் தொடர்ந்து எதிர்கொள்ளத் தாங்கள் தயார் என்பதையும் ஈரான் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (04.04.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ராணுவ தளபதிக்கு உத்தரவு!

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, எதுவும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

எனினும், ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளைச் சந்தித்திருப்பதால் ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

அதேநேரத்தில், இது உயர்மட்ட ராணுவத் தலைமைகளில் நடைபெறும் வழக்கமான ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கைதான் என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்தன.

2ஆவது போட்டியிலும் மண்கவ்வியது சி.எஸ்.கே.!

ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன் படிமுதலில் களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே சஞ்சு சாம்சன் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இருப்பினும், 18 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், இறுதியில் ஷிவம் துபே 27 பந்துகளில் 45 ரன்களும் எடுக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் விஜய்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (39 ரன்கள்) மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் (43) மற்றும் கூப்பர் கோனோலி (36) ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஷஷாங்க் சிங் 14 ரன்கள் எடுத்து 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.

சென்னை அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது தோல்வியாகும்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...