Home Blog

திட்டமிட்ட காலத்தை கடந்தும் முழுமையடையாத ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்திப் பணிகள்! பொதுமக்கள் கடும் அதிருப்தி

 

மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே அரசாங்கங்களின் அடிப்படை பொறுப்பாகும்.

ஆனால் ஹட்டன் புகையிரத நிலையத்தை மையமாகக் கொண்டு சுமார் 306 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டம், பல ஆண்டுகளாக முழுமையான பயன்பாட்டிற்கு வராத நிலையில் காணப்படுவது தொடர்பில் பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.

திட்டமிடலின் படி, 2022 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டிய இந்தத் திட்டம், தற்போது 2026 ஆம் ஆண்டையும் கடந்துள்ள நிலையிலும் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலையில் காணப்படுகிறது.

ஹட்டன் புகையிரத நிலையத்தின் முன்புறத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பயணிகளுக்கான நவீன ஓய்வு அறைகள், சுகாதார வசதிகள், டிக்கெட் வழங்கும் அலுவலகம், மேல்மாடிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகன தரிப்பிட வசதிகள் என்பன உருவாக்கப்படவிருந்தன.

மலைநாட்டு சுற்றுலா மையமாக விளங்கும் ஹட்டன் நகரத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இத்திட்டம் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது காணப்படும் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கட்டடத்தின் பல பகுதிகள் இன்னமும் முழுமையடையாமல் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதையும், கட்டுமானப் பகுதிகளில் பாசி மற்றும் தாவரங்கள் வளர்ந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டதன் விளைவாக கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக நோர்வூட் பிரதேச செயலகத்தின் அலுவலக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த ஆண்டு தீபாவளி வர்த்தக கண்காட்சி மற்றும் தற்காலிக வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதன் மூலம் நகர சபை வருமானம் ஈட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட முக்கிய நோக்கங்களான புகையிரத பயணிகளுக்கான வசதிகள், நிரந்தர வர்த்தக வளாகங்கள் மற்றும் வாகன தரிப்பிட வசதிகள் என்பன இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதுவரை சுமார் 306 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டம் ஏன் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு பெறவில்லை? திட்ட தாமதத்திற்கு காரணமானவர்கள் யார்? செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணத்திற்கு பொறுப்புக் கூறுவது யார்? என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

இலங்கையில் ஆட்சிகள் மாறும் போது முன்னைய அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கைவிடப்படுவதும், பின்னர் மீண்டும் அவற்றை புனரமைக்க அல்லது நிறைவு செய்ய மேலதிக கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய நிலைமைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலதிக சுமையை ஏற்படுத்துவதோடு, மக்களின் வரிப்பணமும் பயனற்ற வகையில் விரயமாகும் அபாயத்தை உருவாக்குகின்றன.

எனவே ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, திட்டத்தின் தற்போதைய நிலை, செலவீன விவரங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்த அபிவிருத்தித் திட்டம் உண்மையில் மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இன்னும் பதிலின்றியே உள்ளது.

மலைவாஞ்சான்

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்!

– 311 முழுமையாக மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்ன் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் விசேட தடயவியல் அகழ்வாராய்ச்சி நேற்று நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மிகத் தீவிரமாக இடம்பெற்ற போதே இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது, மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த புதிதாக ஒரு சிசுவினுடைய எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நிபுணர்களால் தரைக்கடியில் அடையாளம் காணப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்த தடயவியல் விதிகளுக்கமைய துல்லியமாகச் சுத்தம் செய்யப்பட்டு, பிரத்தியேகமாக இலக்கமிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அங்கு ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த சிறுவர்களின் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாகப் பொதியிடப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு ஆகிய இரு வேறு பகுதிகளில் இருந்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுகளின் மூலம் மொத்தமாக 327 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் கூட்டுப் பரிசோதனைகளுக்காக இதுவரை 311 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தரைக்கடியில் இருந்து முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றக் கட்டுக்காவலில் 112ஆவது சான்றுப்பொருள்
மேலும், நேற்று தோண்டப்பட்ட விசேட அகழ்வுக் குழி ஒன்றில், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் மிக நெருக்கமாகக் காணப்பட்ட பழைய நாணயக் குற்றி ஒன்று தடயவியல் அதிகாரிகளால் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாணயக் குற்றியை இந்தப் புதைகுழியின் காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான மிக முக்கிய சான்றாகக் கருதி, 112 ஆவது சான்றுப்பொருளாக அதிகாரிகள் இலக்கமிட்டுள்ளனர். அத்துடன், மேலதிக பரிசோதனைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அது தற்போது நீதிமன்றக் கட்டுக்காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: கிளிநொச்சியில் சோகம்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகம் ஒன்றில் நேற்றுக் (09) காலை ஏற்பட்ட திடீர் மின்சார விபத்தில் சிக்கி இளம் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோகச் சம்பவத்தில் கிளிநொச்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த இளைஞர் நேற்றுக் காலை வழக்கம் போல் குறித்த தொழிலகத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தனது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அந்த இளைஞரை மின்சாரம் பலத்த வோல்ட்டளவில் தாக்கியுள்ளது.

இதனால், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அங்கிருந்த ஏனைய தொழிலாளர்களினால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பாகத் தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் கடைச்சல் தொழிலகத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பலகோணங்களில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (10.06.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார்.

அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.

அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன.

‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது.

இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே.

அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார்.

அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் எழுப்பியவர் இவர்.

 

செம்மணியில் மேலும் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (9) சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒரு என்புக்கூட்டின் மேல் இருந்து நாணயக் குற்றி ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிசுவின் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 20ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்போது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களுடைய 8 என்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 என்புத்தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் சிசுவின் என்புக்கூடு உட்பட 9 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இன்றைய அகழ்வு பணியின்போது என்புக்கூடொன்றின் மீதிருந்து நாணயக்குற்றி ஒன்று மீட்கப்பட்டு, சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது 327 மனித என்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 311 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் சபையின் 114 ஆவது கூட்டத்தொடரின் ஏழாம் நாளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

கடந்தகால உதவிகளுக்கு நன்றி
இக்கலந்துரையாடலின் போது, உலக வங்கி இலங்கைக்குக் கடந்த காலங்களில் வழங்கிய நிதி மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்காக வடிவேல் சுரேஷ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

திட்வா புயல் பாதிப்புகள் மற்றும் மீள்குடியேற்றக் கோரிக்கை
தொடர்ந்து, அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயல் காரணமாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து உலக வங்கிப் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகளும் வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதிர்கால உதவித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஆதரவையும் உலக வங்கியிடம் அவர் வலியுறுத்தினார்.

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்
மேலும், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிபவர்களில் சுமார் 80 சதவீதமானோர் பெண்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்று வருமான வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கலந்துரையாடலின் போது, மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பாரும் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் குறித்து ஆராய்வு!

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சமந்த வித்யாரத்ன பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்தஜயசிங்க தலைமையில்
விசேட கலந்துரையாடல் இன்று (09/06)
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியை சட்டபூர்வமாக ஒதுக்குது தொடர்பாகவும் திட்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உடனடி தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிட நிர்மாண தீர்வுகளை விரைவாக வழங்குவது.தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான வசதிகள், விஞ்ஞான ஆய்வகம், கணனி கூடம், நூலகம் மற்றும் விளையாட்டுப் பிரிவைக் கொண்ட தமிழ் மொழி மூல 1AB மாதிரி பாடசாலைகளை உருவாக்குவது. தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, மலையக கல்வி அபிவிருதிக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விரைவான நடவடிகைக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளிதார்.

இந்நிகழ்வில் மலையக மக்களை பிரதிநிதிதுவப்படுதும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தலவத்துகொட தீ விபத்து: காயமடைந்த மூவரும் பலி!

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, காயமடைந்திருந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவகத்தில் திடீரெனத் தீ பரவியதை அடுத்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

இந்த விபத்தின் போது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும், உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சினிமா

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

செய்தி

திட்டமிட்ட காலத்தை கடந்தும் முழுமையடையாத ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்திப் பணிகள்! பொதுமக்கள் கடும் அதிருப்தி

0
  மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே அரசாங்கங்களின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால் ஹட்டன் புகையிரத நிலையத்தை மையமாகக் கொண்டு சுமார் 306 மில்லியன் ரூபா...

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
- 311 முழுமையாக மீட்பு யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: கிளிநொச்சியில் சோகம்!

0
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகம் ஒன்றில் நேற்றுக் (09) காலை ஏற்பட்ட திடீர் மின்சார விபத்தில் சிக்கி இளம் தொழிலாளி ஒருவர்...