Home Blog Page 2

வடக்கில் வறுமை ஒழிப்பு சமர் முன்னெடுப்பு!

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு இன்று 01.08.2025 விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், , பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” தென்னை பயிர்செய்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கில் இவ்வருடத்தில் 16 ஆயிரம் ஏக்கர் காணியில் தென்னை பயிர்செய்கை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காணிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றது. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவே இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வறுமை ஒழிப்பு என்பது எமது கொள்கைகளின் பிரதான விடயமாகும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் அதிகளவு வறுமை உள்ளது. இந்நிலைமையில் இருந்து மீள வேண்டும். போரால் அனைத்தையும் இழந்துள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வாழ்க்கையில் மாற்றம் இல்லை. வறுமையை ஒழிக்காமல் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது.

தென்னை பயிர்செய்கையை சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் செழிப்பான பொருளாதாரம் இப்பகுதியில் மலரக்கூடும்.” – என்றார்.

செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம்

தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியமானது என்பதுடன், ஸ்கானிங் இயந்திரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு அப்பகுதியில் முழுமையான அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானப்பகுதியில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், இன்றையதினம் குறித்த பகுதியை நேரிற்சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் முழுக்க முழுக்க இராணுவ முகாமாகவும், இராணுவக் கட்டுப்பாட்டு வலயமாகவும் கையகப்படுத்தப்பட்டிருந்த செம்மணிப் பகுதியில் இனங்காணப்படும் மனித என்புத் தொகுதிகள் சாதாரணமாக புதைக்கப்பட்டவை தான் என்று கூற முற்படுவது மிக அபத்தமானது.

இந்துக்களின் சடங்குமுறையில் உடலங்களை கூட்டாக அடக்கம் செய்வதோ, ஆடைகளற்று அடக்கம் செய்வதோ பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறிருக்க ஒரு இனத்தின் பலதசாப்தகாலப் போராட்டத்துக்கான சாட்சியமாக அணுகத்தக்க முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை மடைமாற்றும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

அத்தகைய அரச ஒத்தோடிகளின் செயற்பாடுகளைக் கடந்து, செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் முழுமையாக நடைபெற்று உண்மைகள் கண்டறியப்படுவதற்காக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தைக் கோரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம் – என்றார்.

தீர்வை வரி குறைப்பு வெற்றி!

அமெரிக்காவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தான் எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூpறனார்.

44 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் அதனை 20 சதவீதம்வரை குறைத்துக்கொள்ள முடிந்தமை வெற்றியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘பிராந்தியத்தில் உள்ள போட்டியாளர்களைப் போன்ற ஒரு கட்டண விகிதத்தை அடைவதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாகும். இந்த இலக்கை அடைவதற்கு ஜனாதிபதி சிறந்த தலைமைத்துவத்தையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

அதேபோல மத்திய வங்கி ஆளுநர், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் இலங்கையின் அரச திணைக்களங்களும் உரிய பங்களிப்பை வழங்கினர்.

தீர்வை வரியை மேலும் குறைத்தக்கொள்வதற்குரிய பேச்சுகள் தொடரும்.” – எனவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஆணவக்கொலை  செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

காதல் விவகாரம் தொடர்பில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர் .இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியை. பணிக்கு செல்ல வசதியாக தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய மூத்த மகன் 27 வயதான கவின் செல்வகணேஷ் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27 ஆம் திகதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதி மகன் சுர்ஜித் என்பவர் கவினை வெட்டி கொன்றது தெரியவந்தது.

தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிடாததால் கவினை வெட்டிக்கொன்றதாக பொலிஸாரிடம் அவர் தெரிவித்தார்.

உடனே சுர்ஜித்தை பொலிஸார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு சுர்ஜித் தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணனையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

நேற்று பாளையங்கோட்டை பொலிஸார் இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்தனர்.

பாளையங்கோட்டை பொலிஸ் உதவி கமிஷனரும், விசாரணை அதிகாரியுமான சுரேஷ், வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜிடம் வழங்கினார்.

பின்னர் அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் நிலையத்தில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவினின் உடலை அவரது தம்பி பிரவீன் பெற்றுக்கொண்டனர்.நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் எடுத்து செல்லப்படுகிறது.

செம்மணிப் புதைகுழியில் ஞாயிறு, திங்கள் ‘ஸ்கான்’ ஆய்வு

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 20 சதவீதமாகக் குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை அறிவித்திருந்தார். குறித்த வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகளால் அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

அதன்பின்னரும் வரியை குறைத்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் தொடர்ந்தன. இந்நிலையிலேயே தற்போது 20 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் வரி விதிப்பு அமுலுக்கு வரவுள்ளது.

மியன்மாரில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி: விரைவில் தேர்தல்!

மியன்மாரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த 2020ல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி மோசடி செய்ததாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் இராணுவம் குற்றம்சாட்டியது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, 2021 பெப்ரவரியில் கவிழ்த்தது. அவசரநிலையை அறிவித்து ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியன்மார் மக்கள் பல மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறையில் அடைத்தும் போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கியது. இந்த நடவடிக்கைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதன் பின் அரசு நிர்வாகம், நீதித்துறையை ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். கடந்த, 2024ல் தற்காலிக ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வரும் உத்தரவில் மின் ஆங் ஹிலியாங் கையெழுத்திட்டார்.இதைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குள் பார்லிமென்டுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இராஜதந்திர முயற்சி வெற்றி: வரி குறைப்பு செய்தது அமெரிக்கா!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 20 சதவீதமாகக் குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை அறிவித்திருந்தார். குறித்த வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில்  சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகளால் அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

அதன்பின்னரும் வரியை குறைத்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் தொடர்ந்தன. இந்நிலையிலேயே தற்போது 20 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் வரி விதிப்பு அமுலுக்கு வரவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கொள்கலன்கள் பற்றிய விசாரணை அறிக்கை மறைக்கப்படுவது ஏன்?

“துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாமல், பதுக்கி வைத்திருப்பது ஏன்”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” துறைமுகத்தில் இருந்து 309 கொள்கலன்கள் விசாரணையின்றி விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும், அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில்கூட சமர்ப்பிக்கப்படவில்லை.
அறிக்கையை ஜனாதிபதி ஒளித்து வைத்துள்ளார். கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அறிக்கையில் சர்ச்சைக்குரிய விடயங்கள் இருப்பதாலேயே அது வெளியிடப்படாமல் உள்ளது என்ற சந்தேகம் எழுகின்றது. இதன் பின்புலத்தில் தவறு இருக்கலாம் என்பதாலேயே அரசாங்கமும் மௌனம் காத்துவருகின்றது.” – என்றார்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...