Home Blog Page 2

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார்.

அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.

அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன.

‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது.

இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே.

அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார்.

அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் எழுப்பியவர் இவர்.

 

செம்மணியில் மேலும் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (9) சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒரு என்புக்கூட்டின் மேல் இருந்து நாணயக் குற்றி ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிசுவின் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 20ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்போது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களுடைய 8 என்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 என்புத்தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் சிசுவின் என்புக்கூடு உட்பட 9 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இன்றைய அகழ்வு பணியின்போது என்புக்கூடொன்றின் மீதிருந்து நாணயக்குற்றி ஒன்று மீட்கப்பட்டு, சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது 327 மனித என்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 311 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் சபையின் 114 ஆவது கூட்டத்தொடரின் ஏழாம் நாளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

கடந்தகால உதவிகளுக்கு நன்றி
இக்கலந்துரையாடலின் போது, உலக வங்கி இலங்கைக்குக் கடந்த காலங்களில் வழங்கிய நிதி மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்காக வடிவேல் சுரேஷ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

திட்வா புயல் பாதிப்புகள் மற்றும் மீள்குடியேற்றக் கோரிக்கை
தொடர்ந்து, அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயல் காரணமாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து உலக வங்கிப் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகளும் வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதிர்கால உதவித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஆதரவையும் உலக வங்கியிடம் அவர் வலியுறுத்தினார்.

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்
மேலும், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிபவர்களில் சுமார் 80 சதவீதமானோர் பெண்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்று வருமான வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கலந்துரையாடலின் போது, மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பாரும் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் குறித்து ஆராய்வு!

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சமந்த வித்யாரத்ன பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்தஜயசிங்க தலைமையில்
விசேட கலந்துரையாடல் இன்று (09/06)
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியை சட்டபூர்வமாக ஒதுக்குது தொடர்பாகவும் திட்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உடனடி தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிட நிர்மாண தீர்வுகளை விரைவாக வழங்குவது.தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான வசதிகள், விஞ்ஞான ஆய்வகம், கணனி கூடம், நூலகம் மற்றும் விளையாட்டுப் பிரிவைக் கொண்ட தமிழ் மொழி மூல 1AB மாதிரி பாடசாலைகளை உருவாக்குவது. தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, மலையக கல்வி அபிவிருதிக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விரைவான நடவடிகைக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளிதார்.

இந்நிகழ்வில் மலையக மக்களை பிரதிநிதிதுவப்படுதும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தலவத்துகொட தீ விபத்து: காயமடைந்த மூவரும் பலி!

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, காயமடைந்திருந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவகத்தில் திடீரெனத் தீ பரவியதை அடுத்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

இந்த விபத்தின் போது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும், உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய்வு!

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்வதற்கென எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆயத்தங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல்-நினோ நிலைமையினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு முகம்கொடுத்ததைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் காணப்படுவதாகவும், அது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இயற்கை அனர்த்தங்களை ஒருபோதும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில்) ஏ.எல்.கே. விஜேமான்னகே, கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமஆரச்சி ஆகியோரும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

08 மாகாணசபைகளை மொட்டு கட்சி கைப்பற்றுமாம்!

“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 சபைகளில் 8 ஐ கைப்பற்றுவதற்குரிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளது.” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

“கிராமிய மட்டத்தில் மொட்டு கட்சிக்குரிய ஆதரவு அலை மீண்டும் வலுத்துவருகின்றது.

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்த அரசாங்கத்துக்கு நாம் பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.

எம்முடன் சகோதரக் கட்சிகள் கைகோர்க்கும். 8 சபைகளில் பெரும்பான்மை பலத்தை மொட்டு கட்சி கைப்பற்றும். அதற்குரிய வேலைத்திட்டம் உள்ளது.

அதேவேளை, கட்சி தாவினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் சட்டமூலத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினராகிய நாம் எதிர்ப்பு இல்லை. அச்சட்டமூலத்துக்கு ஆரவு வழங்கப்படும்.” எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.

டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!

🛑டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!

🛑 ரூ. 50 லட்சம்மும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும்!!

டித்வா பேரிடர்: பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் (லயன் வீடுகளின் எண்ணிக்கை)

பதுளை மாவட்டம்
முழுமையாக – 87
பகுதியளவு – 617
………
நுவரெலியா மாவட்டம்
முழுமையாக – 119
பகுதியளவு – 681
……..
கண்டி மாவட்டம்
முழுமையாக – 127
பகுதியளவு – 442
……..
மாத்தளை மாவட்டம்
முழுமையாக – 80
பகுதியளவு – 204
…….
இரத்தினபுரி மாவட்டம்
முழுமையாக – 01
பகுதியளவு – 125
……
கேகாலை மாவட்டம்
முழுமையாக – 10
பகுதியளவு – 36
…….
மொனறாகலை மாவட்டம்
முழுமையாக – 05
பகுதியளவு – 23
…..
களுத்துறை மாவட்டம்
பாதிப்பு இல்லை.
……
குருணாகல் மாவட்டம்
முழுமையாக – 01
பகுதியளவு – இல்லை.
…….
மாத்தறை மாவட்டம்
முழுமையாக – இல்லை.
பகுதியளவு – 19
……..
காலி மாவட்டம்
முழுமையாக – இல்லை.
பகுதியளவு – 05
…..
கொழும்பு மாவட்டம்
முழுமையாக – 01
பகுதியளவு – இல்லை.

முழுமையாக சேதமடைந்த லயன் வீடுகளின் மொத்த எண்ணிக்கை – 431
பகுதியளவு சேதமடைந்த லயன் வீடுகளின் மொத்த எண்ணிக்கை – 2,152

முழுமையாக சேதமடைந்த லயன் வீடுகளுக்கும் 50 லட்சம் ரூபா இழப்பீடும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீட்டு மதிப்பீட்டுக்கமைய கொடுப்பனவு வழங்கப்படும்.

பகுதியளவு சேதமடைந்த லயன் அறைகளில் வாழமுடியாத சூழல் இருந்தால் அதற்கும் 50 லட்சம் ரூபா வழங்கப்படும்.

தகவல்மூலம் – பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

 

 

 

 

 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக

🛑 டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக….!

🛑 பதுளை – 3,752

🛑 நுவரெலியா – 3,171

🛑 கண்டி – 1,722

🛑 மாத்தளை – 844

🛑 இரத்தினபுரி – 249

🛑 கேகாலை – 219

🛑 மொனறாகலை – 157

🛑 களுத்துறை – 116

🛑 குருணாகல் – 39

🛑 மாத்தறை – 35

🛑 காலி – 05

🛑 கொழும்பு – 01

மொத்தம் – 10,310 குடும்பங்கள்

தகவல் – பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

சினிமா

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு!

0
“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

ஆட்சி மாற்றம் குறித்து கனவு காணும் பொருளாதாரக் கொளையாளிகள்!

0
“ராஜபக்சக்கள் பொருளாதாரக் கொலையாளிகள். அந்த பொருளாதாரக் கொலையாளிகளால்தான் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டி ஏற்பட்டது.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது...

காணி உரிமையை உறுதி செய்ய பெருந்தோட்ட குத்தகை நிலங்களை மீளப்பெற வேண்டும்!

0
மலையக மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் வகையில், பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் வீடமைப்புக்கு உகந்த நிலப்பரப்புகளை இனங்கண்டு...