Home Blog Page 2

பதிலடி! வளைகுடாவில் 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டம்!!

ஈ​ரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்​த​தால், வளை​குடா நாடு​களில் உள்ள 8 பாலங்களை தகர்க்​கப்​போவ​தாக ஈரான் எச்​சரித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்​ரானை​யும், கராஜ் நகரை​யும் இணைக்​கும் வகை​யில் 136 மீட்​டர் உயரத்​துக்கு கட்​டப்​பட்டு வந்த பி1 என்ற பாலத்​தின் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி​யது.

இதில் பாலத்​தின் ஒரு பகுதி தகர்ந்​தது. இந்த தாக்​குதலில் 8 பேர் உயி​ரிழந்​தனர், 95 பேர் காயம் அடைந்​தனர்.

இது குறித்து சமூக ஊடகத்​தில் கருத்து தெரி​வித்த அதிபர் ட்ரம்ப்,

“‘ஈரானின் மிகப் பெரிய பாலம் தகர்க்​கப்​பட்​டது. அதை மீண்​டும் பயன்​படுத்த முடி​யாது.

அமெரிக்கா​வுடன் ஈரான் ஒப்​பந்​தம் செய்​யா​விட்​டால், ஈரானில் ஒன்​றும் இருக்​காது’’ என கூறி​யிருந்​தார்.

இதற்கு எக்ஸ் தளத்​தில் பதில் அளித்​துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்​பாஸ் அராக்​சி, ‘‘பொது கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதன் மூலம் ஈரானியர்​களை சரணடைய வற்​புறுத்த முடி​யாது. இது எதிரி தோல்​வியடைந்​ததை​தான் காட்​டு​கிறது’’ என்​றார்.

இந்​நிலை​யில் குவைத்​தில் உள்ள ஷேக் ஜாபர் அல்​-அகமது அல்​-சபா கடல் பாலம், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷேக் சையது பாலம், அல் மக்தா பாலம் மற்​றும் ஷேக் கலிபா பாலம், சவுதி அரேபி​யா​வை​யும் – பஹ்ரைனை​யும் இணைக்​கும் தி கிங் பகத் பாலம், ஜோர்​டானில் உள்ள தி கிங் உசேன் பாலம், டா​மியா பாலம், மற்​றும் அப்​டான் பாலம் என 8 பாலங்களைத் தகர்க்​கப்​ போவ​தாக ஈரான்​ கூறி​யுள்​ளது.

ஈரானின் ஏவுகணை வலிமை இன்னும் அழியவில்லை: அமெரிக்க உளவு பிரிவு

FILE PHOTO: Iranian missiles are displayed in a park, amid the U.S.-Israeli conflict with Iran, in Tehran, Iran, March 26, 2026. Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS/File Photo

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆளில்லா விமானங்கள் எஞ்சியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு மாறாக உளவுத் தகவல்கள் இருக்கின்றன.

அதேவேளை, தமது உண்மையான ராணுவ வலிமை எதிரி நாடுகளுக்கு சரியாக தெரியவில்லை என ஈரான் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்

அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது குறித்த எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும்.

தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தோட்டப்பகுதி மக்களுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் ‘பொருத்தமற்றவை’

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தின் போது, மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மலையக சமூகம் வசிக்கும் பகுதிகளுக்கு அடுக்குமாடிக் கட்டிடங்கள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான 15 முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையின் நகலை பிரதமருக்கு கையளித்த மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க உடனடியாக திகதியை வழங்குமாறும் பிரதமரைக் கோரியிருந்தது.

மார்ச் 28 அன்று பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்பு மற்றும் மாற்றுத் திட்டங்கள் தொடர்பான பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கூறுகிறது.

மக்களின் வீடு மற்றும் காணி உரிமைகள், இடைக்கால தங்குமிட முகாம்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், பெண் சிறுவர் பாதுகாப்பு, உட்கட்டமைப்புகள், நிவாரண முறைகேடுகள் மற்றும் பாகுபாடுகள் குறித்து மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுத்துரைத்தது.

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு 50 இலட்ச ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் காணி வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் குறித்து தான் விசேட கவனம் செலுத்துவதாகவும், மலையக மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்ததாகவும், இதில் விசேடமாக, ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கும் 50 இலட்ச ரூபாய்ப்பு குறையாமல் வீடு மற்றும் காணி வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்ததாகவும், மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஏற்பட்ட ’டித்வா’ சூறாவளியினால் விளைந்த சேதங்களைச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுக்களினதும் உபகுழுக்களினதும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 20,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கவும், பகுதியளவில் சேதமடைந்த 1,15,000 வீடுகளைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சகத்தின் செயலாளர் பொறியாளர் எல். குமுதுலால் போகஹாவட்டே தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும்போது, மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நகர்ப்புற பொது வசதிகளைக் கொண்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதன் அவசியத்தையும், மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படாத பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்வதன் தேவையையும், பொதுமக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மலையகத்திற்குப் பொருத்தமில்லாத எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் முழுமையாக நிலைநாட்டப்படும் வரை தங்களது தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் பணிகளை முன்னெடுப்பதிலும் உறுதியாகவுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு மேலும் தெரிவிக்கின்றது.

“கடலட்டை பண்ணையாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய்வு”

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு பொதுவான சூத்திரமொன்றின் ஊடாகக் கட்டணத்தை மீளக் கணிப்பிடுமாறும், அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர், தற்போதைய கட்டணங்கள் கணிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ முறைமை தொடர்பில் பண்ணையாளர்களுக்குத் தெளிவுபடுத்தினர்.

அத்துடன், கடலட்டைப் பண்ணையாளர்களின் இந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, மதிப்பீட்டு நடைமுறையை மீண்டும் பரிசீலனை செய்வது தொடர்பில் உரிய துறைசார் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடி ஆவன செய்வதாகப் பதிலளித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் மற்றும் யாழ். மாவட்டக் கடலட்டைப் பண்ணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!

ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!

ஈரானில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள் மீது மார்ச் மாதம் முதல் இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பின் பணியாளர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

டெஹ்ரானில் உள்ள நூற்றாண்டு பழமையான பாஸ்சர் நிறுவனம் மற்றும் ஒரு மனநல மருத்துவமனை இந்தத் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் மற்றும் தண்டுவட மரப்பு நோய்க்கான மருந்துகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் சிதைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாக்குதல்கள் ஈரான் நாட்டின் சுகாதாரச் சேவைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேற்காசியாவிலேயே மிக உயரமான பாலம் ஈரானில் அழிப்பு!

“ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என்று மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராஜ் நகரில் அமைந்துள்ள பி1 ‘B1’ பாலத்திலிருந்து புகை எழுவதைக்காட்டும் காட்சிகளை ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

கூடவே, 5 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், மேலும் பல அழிவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

பி1 பாலம் அமைந்துள்ள அல்போர்ஸ் மாகாணத்தின் துணை ஆளுநரான கோத்ரத்துல்லா செய்ஃப், இந்தத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியும், ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ஈரானின் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது; இனி அது ஒருபோதும் பயன்பாட்டிற்கு வராது. இன்னும் பல அழிவுகள் நிகழவிருக்கின்றன.

காலம் கடந்துபோவதற்கு முன்னர், ஒரு சிறந்த நாடாக உருவெடுக்கும் வாய்ப்புள்ள இந்த நாட்டில் மிச்சம் ஏதுமில்லாமல் அழிந்துபோவதற்கு முன்னர், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட இதுவே சரியான தருணமாகும்” என்று ட்ரம்ப் கூறினார்.

இந்தச் சூழலில் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,

“முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது. இது, நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

பி1 பாலம் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவசர மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்த வேளையிலேயே, இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி கூறியது.

அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர் பதவியை வகித்துவந்தார்.

Jeffrey Epstein தொடர்பான கோப்புகளை கையாண்ட விதம் குறித்து Pam Bondi அண்மையில் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார்.

டிரம்ப் அவரைப் பாராட்டிப் பேசினாலும், கடந்த சில வாரங்களில் பதவியை இழந்த இரண்டாவது முக்கிய அதிகாரி இவராவார்.

இனிவரும் காலங்களில் தான் தனியார் துறையில் பணியாற்றப் போவதாகவும், அங்கிருந்தபடியே டிரம்ப் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் Pam Bondi தெரிவித்துள்ளார்.

பிரபாத் சந்திரகீர்த்தியின் நியமனம் உத்தியோகபூர்வமானதா? – அரங்கம் கேள்வி

மலையக விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளராக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினர்- ஜனாதிபதி சந்திப்பை அடுத்து ஊடகங்களின் ஊடாக அறியக் கிடைக்கிறது.

மலையக மக்களின் விவகாரங்களுக்காக ஜனாதிபதி அலுவலக பிரதானியே நியமனம் பெறுவது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த நியமனத்தை உத்தியோகபூர்வ அறிவிப்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட வேண்டும் என மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயர் அரச நிர்வாக அதிகாரியான பிரபாத் சந்திரகீர்த்தி பதுளையைச் சேர்ந்தவர். கடந்த ஆட்சியில் தொழில் ஆணையாளராக இருந்தவர். தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்ததும் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

எனவே மலையக மக்கள் குறித்து நன்கு அறிந்தவராவார். ஆனாலும் இவரது காலத்திலேயே மலையக அதிகார சபையைக் கலைப்பதற்கான செயலாளர் மட்ட பரிந்துரைப்பும் செய்யப்பட்டது.

இதன் போது எமது அரங்கத்தின் செயலதிபர் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, தனிப்பட்ட முறையில் உரையாடிய தருணத்தில் தாம் கலைப்பதில்லை எனும் நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் தித்வா புயலனர்த்த காலத்தில் பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக அத்தியாவசிய சேவை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இதன்போது அனர்த்த காலத்தின்போதாவது மலையக மக்களுக்கு என சிறப்பாக உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபையை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், அதிகார சபைக்கு பொறுப்பான அமைச்சு செயலாளர் என்ற வகையில் அரங்கத்தினால் இவருக்கும் பிரதி அனுப்பப்பட்டது. எனினும் இரண்டு தரப்பிலும் அதற்கு பதிலேதும் கிடைக்கப்பெறவும் இல்லை.

இந்தப் பின்னணியிலேயே பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதியின் மலையக விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இலங்கையின் சட்டவாக்கத்துறையான பாராளுமன்றத்துக்கு நிகராக நிறைவேற்றுத் துறைக்கு பொறுப்பாக ஜனாதிபதியும் அவரது செயலகமும் தொழிற்படுகிறது. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி செயலகத்தின் ஆளனிகளின் பிரதாணியே மலையக மக்களின் விவகாரங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளராக நியமனம் பெற்றிருப்பாராயின் அது வரவேற்கத்தக்கது.

ஆனாலும் அந்த நியமனம் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதா? என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக அரங்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா சி.எஸ்.கே?

IPL தொடரில் சி.எஸ்.கே, பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் Rajasthan Royals அணியிடம் தோல்வி அடைந்தது.

எனவே, இன்றைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சி.எஸ்.கே களமிறங்குகின்றது.

சேப்பாக்கம் ஆடுகளம் கடந்த மாதம் நிறைவடைந்த T 20 உலகக் கோப்பை தொடரின் போது முற்றிலும் ஓட்டக் குவிப்புக்கு சாதகமாக இருந்தது.

அதேவளையில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

இதே நிலையே தற்போதும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இதுவரை IPL தொடரில் 146 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 74 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி வெற்றி கண்டுள்ளது. 70 ஆட்டங்களில் இலக்கை துரத்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...