Home Blog Page 3

யாழ்ப்பாணத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கியுள்ள உயரிய அங்கீகாரம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320-200 ரக விமானமொன்றுக்கு சிற்றி ஒப் யாழ்ப்பாணம் (“City of Yalpanam” எனப் பெயரிட்டுள்ளது. இந்நடவடிக்கையானது யாழ். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தெற்காசியாவின் சிறந்த விமான சேவை என அண்மையில் விருந்து பெற்ற குறித்த விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் , கலாசார முக்கியத்துவத்தையும் மதிக்கும் வகையிலேயே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பல மேற்குலக நாடுகளில் தற்போது விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ளதால் ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் தாயகம் நோக்கி வருகின்றனர். குறிப்பாக நல்லூரி மகோற்வசம் ஆரம்பமாகியுள்ளதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளதால் அது புலம்பெயர் தமிழர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது.

எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, யாழ். பலாலி விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவை இன்மையால், பயணிகள் தொடர்ந்து பயண சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தற்போது இரத்மலானையில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு உள்ளுர் விமான சேவை இடம்பெறுகின்றது. எனினும், இது காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது என பயணிகள் கருதுகின்றனர்.

இதனால் பல பயணிகள் சென்னைக்குச் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் வரும் நிலை காணப்படுகின்றது. எனினும், இந்த முறையும் அனுமதிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகளின் எண்ணிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சவால்கள் பலவற்றை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது பயணத் திறனை பெரிதும் மேம்படுத்தும் என்றும், வடக்குக்கு வருபவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வைக்கும் எனவும் கருதப்படுகின்றது.

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று மூன்று மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்புத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை 118 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை மொத்தமாக 105 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புத் தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

ஆட்சி மாற்றத்துக்காக 2029 வரை காத்திருக்க வேண்டியதில்லை: நாமல் ஜனாதிபதியென்பது சமூகத்தின் கருத்து!

” ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் என்பது சமூகத்தின் கருத்தாகும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அடுத்த ஜனாதிபதி யார் என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அநுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துகள் இல்லை. நாமலை பற்றிதான் தேடப்படுகின்றது. நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை. அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.

இயற்கையாகவேதான் அந்த கருத்தாடல் உருவாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லையாகும். எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் எப்படி நடந்தும் உள்ளது.

பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும்.” – என்றார்.

இஸ்ரேலுக்கு இலவச விசா: என்.பி.பியின் வெளிநாட்டு கொள்கைதான் என்ன?

இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுவருகின்றது. பலம்பொருந்திய நாடுகள்கூட தற்போது இஸ்ரேலை எதிர்த்துவருகின்றன. இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என உலக நாடுகள் ஏற்க ஆரம்பித்துள்ளன. எனினும், இஸ்ரேலியர்களுக்கு இலங்கை இலவச விசா வழங்கியுள்ளது.

இலங்கையானது பாலஸ்தீன விடுதலைக்காக தொடர்ந்து முன்னிலையாகி வந்துள்ளது. அனைத்து ஆட்சியின்கீழும் வெளிவிவகாரக் கொள்கையில் இவ்விடயம் முக்கிய விடயமாக இருந்தது. எனினும், அநுரகுமார திஸாநாயக்க அரசானது இஸ்ரேலுக்காக முன்னிலையாகும் நாடாக இலங்கையை மாற்றியுள்ளது.

எதிரணியில் இருக்கும்போது பாலஸ்தீனத்துக்காக ஜே.வி.பியினர் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். இப்படியான வரலாற்றைக்கொண்ட ஜே.வி.பி., எவ்வித வெட்கமும் இன்றி இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கியுள்ளது. இந்த அரசின் வெளிவிவகாரக் கொள்கைதான் என்ன?” – என்றார்.

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் : ட்ரம்ப்

ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முன்னதாக நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரும்.” என்று கூறி ட்ரம்ப் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில், “நாங்கள் இப்போதுதான் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் இருப்பை உருவாக்கவுள்ளோம். இது தெற்காசியாவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பாக அமையும். இதை முன்னெடுத்துச் செல்லத் தகுதியான எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் குறிப்பிடத்தக்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், பாகிஸ்தான் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட எண்ணெய் வளம், உலகளவில் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், ட்ரம்ப்பின் இன்றைய சமூக வலைதளப் பதிவை அந்தச் செய்தியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன் என்று கூறியது, இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிப்போடு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதித்தது, தற்போது பாகிஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பை உருவாக்குவதாகவும், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் என்று அடுத்தடுத்து இந்தியாவை சீண்டி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தத்தின் மீதான ட்ரம்ப்பின் உரிமை கோரல் நாடாளுமன்றம் வரை விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இனி அடுத்தடுத்த நாட்களில் இறக்குமதி வரியும், எண்ணெய் விவகாரமும் கூட எதிரொலிக்கலாம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கு: ஹட்டனில் துண்டு பிரசுரம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு பிரசுரம் விநியோக நடவடிக்கை ஹட்டன் பஸ் நிலையப் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு , மக்கள் போராட்ட இயக்கம் என்பன இணைந்தே இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும், மாத சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், தோட்ட அடிமை முறைமை நீக்கப்பட வேண்டும், காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே துண்டு பிரசுர விநியோகம் இடம்பெற்றது.

அந்தோனிமுத்து – ஹட்டன்

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக கனடாவும் அறிவிப்பு!

 

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக கனடாவும் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி , ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கமைய ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூத குடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை, ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் என்பன அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் முயற்சி தோல்வி!

ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

எனினும், விண்வெளித் துறையை நோக்கி ஆஸ்திரேலியா நகர்வதற்குரிய முக்கிய பங்களிப்பாக இம்முயற்சி கருதப்படுகின்றது.

பிரிஸ்பேன் சோதனை தளத்தில் இருந்து வானில் பறந்த ராக்கெட் 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.

கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட இந்த எரிஸ் ராக்கெட் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் ஆகும்.
இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.
ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

முதல் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தக்கட்ட முயற்சிக்குரிய நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என தெரியவருகின்றது.

அநுரவுக்கு இராஜதந்திர பாடமெடுக்க மஹிந்த தயாராம்!

“போர் காலத்தில் பலம்பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திர சமரில் ஈடுபட்ட தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. எனவே, இராஜதந்திரம் என்றால் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர, மஹிந்தவிடம் கேட்டு, கற்றுக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் காலத்தில் மஹிந்த ராஜபக்ச பல இராஜதந்திர பிரச்சினைகளை எதிர்கொண்டார். அப்படியான பிரச்சினைகள் தற்போது வருமானால் இந்த அரசு நடுங்கிவிடும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மஹிந்த எடுத்த முடிவால் உலகில் பலம்பொருந்திய நாடுகள் ஓரணியில் திரண்டன. இந்நிலையில் அவற்றைக் கையாள்வதற்கு மஹிந்த கையாண்ட இராஜதந்திர, அரசியல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்தான் மஹிந்த இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார்.
எனவே, நேரம் கிடைக்கும்பட்சத்தில் , மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இராஜதந்திர மற்றும் அரசியல் தொடர்பில் அனுபவத்தை பெற்றுக்கொள்ளுமாறு தற்போதைய ஜனாதிபதிக்கு கூறுகின்றோம்.” – என்றார்.

உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை!

உள்ளகப் பொறிமுறையால் நீதி கிடைக்காது என்ற தொடர்ச்சியான வெளிப் படுத்தலை ஐ.நா. புறம்தள்ளுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக்கருத்து தெரிவித்த போதே அவர்கள்இவ்வாறு குறிப்பிட்டனர்.

‘உள்ளகப் பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம்.அப்படி இருந்த போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஓர் இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்டகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளகப் பொறிமுறைஎப்படி சாத்தியமான முறையில் வழி வகுக்கும் என எமக்குத் தெரியவில்லை.

இந்தநாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கிக்கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்தப் புதைகுழிகள் வெளிப்படுகின்றன. இவற்றைச் செய்தவர்கள் யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரிப் போராடி வரும் நாம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்30 ஆம் திகதி சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேசவிசாரணையினை வலியுறுத்தி வடகிழக்குதழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளோம் – எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...