Home Blog Page 4

பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்

பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பதுளை மாவட்டத்தின் பதுளை கல்வி வலயம் 67.97 சதவீத பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளதாக ஊவா மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 1838 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளனர்.

பசறை கல்வி வலயம் 66.98 சதலீத பெறுபேறுகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் இவர்களில் 361 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

இவ்வலயத்தின் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவன் சதுர்சன் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வெலிமடை கல்வி வலயம் 64.60 சதவீத பெறுபேறுகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் 1113மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

பண்டாரவளை கல்வி வலயம் 64.40 சதவீத பெறுபேறுகளுடன் நான்காம் இடத்தினையும், மஹியாங்கனை கல்வி வலயம் 63.05 பெறுபேறுகளுடன் ஐந்தாம் இடத்தினையும் வியலுவ கல்வி வலயம் 55.87 சதவீத பெறுபேறுகளுடன் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 10242 பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 6646 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.1005 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பசறை நிருபர்

கொத்மலை, கெரண்டியெல்லவில் கோர விபத்து: ஐவர் காயம்!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பொடை, கெரண்டியெல்லவில்  பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொத் மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதிக்கு சென்று ரம்பொடையில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காயம் அடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா.

இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!

 

பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே ஆ ப் ஆட்டங்​கள் நடை​பெற்​றன.

இதில் போஸ்​னி​யா​வில் உள்ள ஜெனிகா நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான இத்​தாலி, தரவரிசை​யில் 66-வது இடத்​தில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்தி​யது.

15-வது நிமிடத்​தில் இத்​தாலி அணி​யின் மொயீஸ் கீன் கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் அந்த அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 41-வது நிமிடத்​தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்​டோனிக்கு ரெட் கார்டு வழங்​கப்​பட்​டது.

இதனால் இத்​தாலி அணி 10 வீரர்​களு​டன் விளை​யாடும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 79-வது நிமிடத்​தில் போஸ்னியா பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் வீரர் ஹாரிஸ் தபகோ​விச் கோல் அடிக்க ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. இதையடுத்து கூடு​தலாக 30 நிமிடங்​கள் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் போஸ்​னியா மற்​றும் ஹெர்​சகோ​வினா அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்​றது. அந்த அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அந்த கடந்த 2014-ம் முதன்​முறை​யாக உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் விளையாடி இருந்​தது.

அதேவேளை​யில் இத்​தாலி அணி தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறி உள்​ளது. அந்த அணி 2018 மற்​றும் 2022-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடருக்​கும் தகுதி பெற இல்​லை.

1934, 1934, 1982 மற்​றும் 2006-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இத்​தாலி அணி தற்​போதைய தோல்​வி​யால் கால்​பந்​தின் மிகப்​பெரிய திரு​விழா​வில் 16 ஆண்​டு​களாக நுழைய முடி​யாமல் தவிப்பு நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார்.

இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்​கிறார். இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பை நடிகர் சல்​மான் கான் சமூக வலை​தளப் பக்​கத்​தில் தெரிவித்திருந்தார். இந்​நிலை​யில் இப்​படத்​தில் நயன்​தாரா நாயகியாக இணைந்​துள்​ளார். இதை படக்​குழு அறி​வித்​துள்ளது. ஷாருக்​கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்​திக்​குச் சென்ற நயன்தாரா, இப்​போது சல்​மான் கான் படத்தி​லும் கதா​நாயகி​யாக நடிக்​கிறார்.

அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார்.

வெள்ளை மாளிகையில் இருந்து 19 நிமிடம் அவர் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், ‘‘ஈரானுக்கு எதிரான போர் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாங்கள் இதை முடிக்கப் போகிறோம். மிக வேகமாக முடிக்கப் போகிறோம். நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம்.

ஈரான் ராணுவத்தை நசுக்க வேண்டும், ஈரானிய மதகுருமார்களின் அரசு பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஈரான் அணுஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த போரில் அமெரிக்கா இணைந்தது.

இந்த முக்கிய நோக்கங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கு வாரங்களில் நமது ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவான, தீர்க்கமான, மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதுபோன்ற வெற்றிகளை இதற்கு முன் மிகச் சிலரே கண்டிருக்கிறார்கள்.

ஈரானில் உள்ள அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்துக்கே அவர்களை திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம்.

அமெரிக்க பேச்சுவார்த்தையில் ஈரான் தீர்வை எட்டாவிட்டால், அவர்களின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் நாங்கள் தாக்குவோம். எல்லா வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் (ஈரானிடம்) எதுவும் இல்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் காயப்படவோ அல்லது தோல்வியடையவோ நான் அனுமதிக்க மாட்டேன்’’ என தெரிவித்தார்.

போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு!

ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.

இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் அடைந்துவிட்ட நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் இறுதி முடிவு என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வன்முறையைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போரைத் தொடர்வதால் இனிமேல் சாதிக்க வேண்டியது ஏதுமில்லை என்பதே அவரது முக்கியக் கருத்தாக உள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (02.04.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்!

“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இஸபெல்லா மார்டினைக் கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்களான பரணீதரன் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்களிம் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்ததாவது:-

“இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் கொழும்பு வீதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுக்கு எதிராக நான் போராடிய போது, எனக்குத் தஞ்சம் தந்த இடமே இந்தக் கனேடிய இல்லமாகும். இன்று எமது நலிவுற்ற மலையக மக்களின் உரிமைகளுக்காக இங்கு வந்துள்ளோம்.

மலையகத் தமிழர்களில் கூலித் தொழிலாளர்கள் ஒரு சிறு பிரிவினரே (சுமார் ஒரு இலட்சம் பேர்). ஆனால், ஒட்டுமொத்தமாக 15 இலட்சம் பேரைக் கொண்ட ஒரு தேசிய இனமாக மலையகச் சமூகம் வளர்ந்துள்ளது. எனவே, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளர் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது.

தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்றும் முழுமையற்ற குடியுரிமை மற்றும் நவீன அடிமைத்தனத்தின் அறிகுறிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

கனடாவின் உலகளாவிய உதவிக் கரங்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பு நடவடிக்கைகள் நலிவுற்ற எமது மலையக மக்களையும் சென்றடைவதை கனடா உறுதிப்படுத்த வேண்டும் என்று தூதுவரிடம் வலியுறுத்தினோம்.” – என்றார்.

இந்தக் கருத்துக்களைக் கனேடியத் தூதுவர் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டதுடன், இது குறித்த சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதாகவும் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.

இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969-ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.

இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இருப்பினும் அந்த முயற்சி பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த சூழலில் அந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று ‘ஆர்டெமிஸ் -2’ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் (விண்வெளி வீராங்கனை) மற்றும் கனடாவின் ஜெர்மி ஹன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் அடங்கியுள்ளனர்.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது.

இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் முதல் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் ‘ஓரியன்’ விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...