Home Blog Page 5

செம்மணியில் இன்று 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!

 

யாழ்ப்பாணம், செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 3 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளுமாக 102 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 115 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ஒரு பெரிய எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய பொருட்கள்மீது 25 சதவீத வரி!

எதிர்வரும் ஆகஸ்ட் 1-ம் திகதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில்,

“இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்களின் வரிகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன. அவை உலகிலேயே மிகவும் அதிகம். மேலும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான, அருவருப்பான பணமற்ற வர்த்தகத் தடைகளை அவர்கள் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவத்துக்கான தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்தே அதிக அளவில் வாங்கி வந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்தும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவருமே விரும்பும் நேரத்தில், அவர்கள் (இந்தியா) சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்குகிறார்கள். இவை எதுவும் நல்லதல்ல.

எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா?

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் தொல்பொருள் திணைக்களம், தடயவியல் பிரிவினர், சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், குற்றவியல் பிரிவினர், தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அலுவலர்கள் நீதிவான் திருமதி.தஸ்னீம் பெளசான் தலைமையில் ஒன்றுகூடி ஆராய்வது என்றும், அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இன்று தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய தரப்புகளுக்கான அழைப்பை சம்பூர் பொலிஸார் அனுப்ப வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி மூதூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இன்று சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிக்கையை முன்வைத்தார். அதன்படி கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு எச்சங்கள் மிகவும் பழைமையானது என்று குறிப்பிட்டிருந்தார்.அதேவேளை தொல்பொருள் திணைக்களத்தினர் முன்வைத்த அறிக்கையின்படி இவ்விடத்தில் முன்னர் மயானம் ஏதாவது இருந்துள்ளதா என்பதைத்  துல்லியமாகக் கூற முடியாதுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தீர்மானம் ஒன்றுக்கு ருவதாயின் இந்த அகழ்வுடன தொடர்புடைய சகல தரப்புகளுடனும் இணைந்து கலந்துரையாட வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

கடந்த 19 ஆம்  திகதி சம்பூர் பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் பிரிவினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன வெளிவந்தன. இதனையடுத்து அகழ்வு வேலைகள் மூதூர் நீதிமன்ற உத்தரவின்படி இடைநிறுத்தப்பட்டன. அதனையடுத்து 25 ஆம் திகதி இடத்தைப் பார்வையிட்ட நீதிவான் நேற்று வரை அகழ்வை இடைநிறத்த உத்தரவிட்டிருந்தார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் பிரிவினர் அகழ்வைத்  தொடர்வதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்துக்கு  அறிக்கை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

உலகையே உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மேலும் சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

 

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8-ஆக பதிவானது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் இருந்த பொருட்கள், சரிந்து விழுந்தன. ஜன்னல் கண்ணாடி உடைந்தன. மேலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கின. அங்கு சுமார் 13 அடி உயரம்வரை அலைகள் எழுந்தன.

ரஷியாவின் குரில் தீவுகளின் பரமுஷிர் தீவில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் சுனாமி கடுமையாக தாக்கியது.

கம்சட்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவு, அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிற பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.ஹவாய் தீவையும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

மேலும் கனடா, ஆஸ்திரேலியா, சிலி, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா, வட கொரியா உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ரஷியாவின் நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ பகுதியை தாக்கியது. அங்கு சுமார் 2 அடி உயரத்தில் அலைகள் ஏற்பட்டன.

அதேபோல் இஷினோமாகி பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கின. அங்கு சுமார் 1.6 அடி உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தோ னேசியாவின் சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு அதே அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலகில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் முதல் 10 இடத்துக்குள் தற்போது கம்சட்சா தீபகற் பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும் இடம் பெற்றுள்ளது.

ஹவாய் தீவிலும் சுனாமி!

 

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது.

ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது.

இந்தச் சூழலில், ஹவாயின் ஹனாலி பகுதியில் முதற்கட்டமாக 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பத் தொடங்கியுள்ளன. சுனாமி அலைகள் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுனாமி முன்னெச்சரிக்கையாக அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை எந்த கப்பல்களும் உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிட்வே அட்டோலில் 6 அடி உயர சுனாமி அலைகள் எழுந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் ஹவாயில், ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி குடியிருப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக உயரமான தரை அல்லது கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பேசிய அவர், “சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடற்கரையோரத்தில் தங்கவோ அல்லது சுனாமி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க தங்கள் உயிரைப் பணயம் வைக்கவோ கூடாது. இது ஒரு வழக்கமான அலை அல்ல. நீங்கள் சுனாமியால் தாக்கப்பட்டால் அது உண்மையில் உங்களைக் கொன்றுவிடும்.” என்றார்.

இதற்கிடையே சீனாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர பெரு, ஈகுவேடார் நாடுகளும் சுனாமி எச்சரிக்கை விடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

பல அடி உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள்!

 

ரஷ்யாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பான் பசிபிக் கடற்கரையோரம் உள்ள நகரங்களில் 9 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ஹோக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அச்சுறுத்தலால் ஜப்பானின் வடகிழக்கில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது. ரஷியாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி அலை தாக்கியது.
அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டனர்.

அத்துடன், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷியாவின் கடற்கரையோரப் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் கடற்கரைக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த பகுதியையும் தற்போது சுனாமி அலை தாக்கியுள்ளது.

ஜப்பானின் சில பகுதிகளில் 10 அடி உயரத்திற்கு சுனாமி தாக்கிய நிலையில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம்!

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

‘ தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வே எமது கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக காணி பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்ட அதிகாரப் பகிர்வு வேண்டும்.

அந்த வகையிலான ஆட்சி முறைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அரசாங்கத்தோடு நாட்டுக்குள் இந்த அழகு முறையை கொண்டு வருவதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

எனினும், இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் ஒரு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது இங்குள்ள இனங்களை ஒன்றிணைக்கின்ற எண்ணங்கள் இன்னும் உருவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது!

 

“ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. ” – என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில்,
எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

“ பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை தொடங்கினர்.

மே 6 மற்றும் 7 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில் திட்டமிட்டபடி இந்திய இராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களுக்குள் துல்லிய தாக்குதல்களை நடத்தி பழிதீர்த்தன.” – எனவும் மோடி குறிப்பிட்டார்.

அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களும் சொத்துகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இப்போது வரை அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தளங்கள் அழிக்கப்பட்டன. இது நடக்கும் என யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக நாம் செய்த தயாரிப்புகள் காரணமாகவே, நமது தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடந்தன. இல்லாவிட்டால், நாம் எவ்வளவு இழப்பைச் சந்தித்திருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தன்னிம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின.”- என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.

பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்!

 

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது.

இந்நிலையில் பிரிட்டனின் முடிவுக்கு நெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார்.

‘ பிரிட்டனின் இந்த முடிவு பிற்காலத்தில் அவர்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.” – என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

செய்தி

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை: விமானங்கள் பறக்க தடை!

0
  பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை. 1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என...

மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

செம்மணியில் சான்றுப்பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை

0
  செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பிற சான்றுப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணியிலிருந்து 05.00 மணி வரை...